News April 30, 2024

ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் விலகல்

image

நடப்பு ஐபிஎல் ப்ளே-ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சிக்காக அந்த அணி வீரர்கள் இங்கிலாந்து திரும்ப உள்ளனர். இதனால், சாம் கரன், பட்லர், சால்ட், பேர்ஸ்டோ, மொய்ன் அலி உள்ளிட்ட வீரர்கள் வெளியேற உள்ளதால் சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட அணிகளின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News April 30, 2024

பிரஜ்வாலைக் கைது செய்ய பரிந்துரை

image

பாலியல் புகாரில் சிக்கிய தேவகவுடா பேரன் பிரஜ்வாலை கைதுசெய்ய கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேசிய ஆணையம் மவுனம் காப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்தக் கூறிய மகளிர் ஆணையம், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாவதாக வேதனை தெரிவித்துள்ளது.

News April 30, 2024

இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்குச் செல்லும்!

image

2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியின் விளம்பரத் தூதரான யுவராஜ் சிங்கிடம், அதில் கலந்துகொள்ளும் 20 அணிகளில் எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து அவர், “இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. இந்த அணிகள் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் ஃபார்மில் உள்ளன” எனக் கூறினார்.

News April 30, 2024

‘வாடிவாசல்’ கதை எனக்குத் தெரியும்

image

வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படம் குறித்து அண்மையில் பேசிய இயக்குநர் மிஷ்கின், இந்தியாவின் மிகப்பெரிய படைப்பாக ‘வாடிவாசல்’ இருக்கும் என்றார். ‘வாடிவாசல்’ நாவலில் திரைப்படமாகும் அந்தப் பகுதியை மட்டும் வெற்றிமாறன் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்த அவர், சிறந்த நடிகரான சூர்யா இப்படத்திற்குப் பிறகு ஒரு லெஜெண்டாகி விடுவார் எனப் பாராட்டினார்.

News April 30, 2024

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாளை முதல் 3 நாள்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

News April 30, 2024

முதல் இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

image

தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் (₹1,215.79 கோடி) ஈட்டிய ரயில் நிலையங்களில், சென்னை சென்ட்ரல் முதல் இடம் பிடித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் சுமார் 700 ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் ₹12,020 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து, 2ஆவது இடத்தில் எழும்பூர் (₹564.17 கோடி), 3ஆவது இடத்தில் கோவை (₹324.99 கோடி) உள்ளது.

News April 30, 2024

பாஜக தேர்தல் அறிக்கை காணாமல் போனது

image

பாஜகவின் தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனதாக காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காங்., தேர்தல் அறிக்கைக்கு இணையாகக் கூறப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே இல்லாததால், பாஜக தலைவர்களே அதைப்பற்றிப் பேசுவதில்லை எனக் கூறினார். மேலும், காங்., தேர்தல் அறிக்கையில் வேலை, வளர்ச்சி பற்றி கூறப்பட்டுள்ளதால் அனைவரும் இதைப் பற்றி பேசுகின்றனர் என்றார்.

News April 30, 2024

மணிப்பூர் சம்பவத்தில் போலீசார் உடந்தை

image

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பில் ஓடி ஒளிந்ததாகவும், காவலர்கள் அந்த ஜீப்பை ஓட்டிச் சென்று கலவர கும்பல் அருகே நிறுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

இந்தியாவின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்?

image

டி20 உலகக் கோப்பைக்கான இந்தியா கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது. தோனி ஓய்வு பெற்றபின் நிரந்தர விக்கெட் கீப்பர் ஆவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, நடப்பு ஐபிஎல் தொடரில், KL ராகுல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களில் யாரை அடுத்த கீப்பராக தேர்வு செய்யலாம்? உங்களது கருத்தை சொல்லுங்க.

News April 30, 2024

தேவையின்றி வெளியே வர வேண்டாம்

image

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, அதிகளவில் தண்ணீர் குடிக்கவும், பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 5 நாள்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி வரை உயரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

error: Content is protected !!