India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
20 ஓவர் உலகக் கோப்பை இந்திய அணியில் ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். காயத்தால் விளையாடாமல் இருந்து பல மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல்லில் களமிறங்கிய ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் அதிரடி வீரர்கள் ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோரும், ஐபிஎல்லில் கலக்கி வரும் சாஹலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
‘ரோஜா’ சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி, வீட்டை எதிர்த்து தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். பிறகு, தனது கணவருடனான ரொமாண்டிக் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அடிக்கடி பகிர்ந்து வந்தார். இந்நிலையில், அந்தப் புகைப்படங்களை திடீரென நீக்கியதால், அவர் விவாகரத்து பெற்றதாக தகவல் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கணவருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த வீரரான கே.எல்.ராகுலுக்கு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 378 ரன்கள் எடுத்துள்ள அவர் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளார். நடப்புத் தொடரில் பண்ட், சஞ்சு சாம்சன் இருவரும் மிகச் சிறப்பாக ஆடி வருவதால் ராகுலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்குக் கடன் தருவதற்கு ஒப்புதல் வழங்கிய நாளில் இருந்து, கடனுக்கான வட்டியைக் கணக்கிடக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வாடிக்கையாளர்களுக்கு எப்போது கடன் கொடுக்கப்படுகிறதோ, அந்த நாளில் இருந்துதான் கடனுக்கான வட்டியைக் கணக்கிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை வங்கிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் விவகாரம் வெளியே வந்ததன் பின்னணியில் பாஜக நிர்வாகி இருக்கலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரஜ்வாலிடம் டிரைவராகப் பணியாற்றிய கார்த்திக், இந்த வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை பாஜக நிர்வாகி தேவராஜே கவுடாவிடம் கொடுத்ததாகக் கூறியுள்ளார். முன்னர் தேவராஜே, பிரஜ்வாலின் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியிருந்தார்.
ஜித்து மாதவன் இயக்கத்தில், ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘ஆவேஷம்’. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படத்தைப் பார்த்த நடிகை நயன்தாரா, ஃபகத் பாசிலைப் பாராட்டியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், சூப்பர் ஸ்டார் ஃபகத் பாசில் எனப் புகழ்ந்துள்ளார். வெறித்தனமாக நடித்திருப்பதாகக் குறிப்பிட்டுப், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சுனில் நரேனும் நானும் அதிகமாகப் பேசிக்கொள்ள மாட்டோம் என்று KKR அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார். நான் சரியாகப் பந்து வீசவில்லை என்றாலோ எனக்கு ஏதேனும் ஒரு பிரச்னை என்றாலோ சுனில் உடனே வந்து எனக்குத் துணை நிற்பார் என்று கூறிய வருண், ஆறுதல் சொல்லித் தேற்றுவார் என்றார். ஷாருக்கானும், அபிஷேக் நாயரும் அளித்த ஆதரவை ஒருபோதும் மறக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.
இந்து, முஸ்லிம் மக்களிடையேயான அமைதியை சீர்குலைக்க ராஷ்ட்ரிய ஜனதா தளம் முயற்சிப்பதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மாதேபுராவில் பிரசாரம் செய்த அவர், இந்து, முஸ்லிம் இடையேயான அமைதியை சீர்குலைக்க நினைத்தபோது, கூட்டணியை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார். ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ், தற்போது பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்குக் குறைந்தபட்சத் தண்டனை வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை வழங்க வேண்டும் என அவர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்திற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான அணியில் 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட் (கீப்பர்), சஞ்சு சாம்சன், பாண்டியா (துணை கேப்டன்), துபே, ஜடேஜா, சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ், கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.