News May 14, 2024

நாளை மகளிர் உரிமைத் தொகை ₹1000

image

மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் மேல்முறையீடு செய்தவர்களுக்கு நாளை ₹1000 வராது. அவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு பணம் செலுத்தப்படும் என தெரிகிறது.

News May 14, 2024

இறுதிக்கட்டத்தில் ‘G.O.A.T’ படப்பிடிப்பு

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘G.O.A.T’ படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையில் கடந்த மாதம் வெளியான ‘விசில் போடு’ பாடல், வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News May 14, 2024

ஒரே டிக்கெட் திட்டம் ஒரு மாதத்தில் அமல்

image

சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு பயணச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. அதனை சீரமைக்கும் முடிவில் போக்குவரத்துத் துறை இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

News May 14, 2024

பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை

image

ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர், வட இந்தியாவில் உள்ள பிரச்னைகளும், தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளும் வேறு எனத் தெரிவித்தார்.

News May 14, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழைப்பதிவு

image

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் மக்கினாம்பட்டியில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பொள்ளாச்சி மற்றும் தூத்துக்குடியில் தலா 7 செ.மீ., மழைப் பொழிவு பதிவாகியுள்ளன. கோவை மாவட்டம் ஆழியார், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், தேனி மாவட்டம் வீரபாண்டி, நீலகிரி மாவட்டம் பார்வுட் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

News May 14, 2024

ஒரே நாளில் ₹8000 கோடி காலி

image

அமெரிக்க பங்குச்சந்தையில் GameStop என்ற பங்கின் விலை நேற்று ஒரே நாளில் 74% உயர்ந்ததால் Short Sellers சுமார் $1 பில்லியன் (₹8000 கோடி) நஷ்டத்தை சந்தித்துள்ளனர். Short Sellers என்றால் பங்கை காலையில் அதிக விலைக்கு விற்றுவிட்டு, மாலையில் குறைந்த விலைக்கு வாங்குவார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக பங்கின் விலை உயரும்போது அவர்கள் நஷ்டமடைகின்றனர். குறிப்பாக, GameStop மாதிரியான நிகழ்வுகள் அபூர்வமானவை.

News May 14, 2024

மதியம் 1 மணி வரை மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 குறைந்து ₹53,520க்கும், கிராமுக்கு ₹35 குறைந்து ₹6,690க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ₹90.70க்கும், கிலோ வெள்ளி ₹90,700க்கும் விற்பனையாகிறது.

News May 14, 2024

OTT-இல் வெளியானது ‘கள்வன்’

image

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம் இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. பி.வி.ஷங்கர் இயக்கிய இப்படத்தில், பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காடுகளின் பின்னணியில் மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன் உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

News May 14, 2024

7,39,539 மாணவ, மாணவிகள் தேர்ச்சி

image

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. 8,11,172 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7534 மேல்நிலைப் பள்ளிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 1964 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக, 241 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 187 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 170 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!