India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் 19 பேர் களத்தில் போட்டியிட்டாலும், அண்ணாமலைக்காக மட்டுமே ஒட்டுமொத்த ஐ.டி விங்கும் வேலை செய்வதாக அக்கட்சிக்குள்ளேயே விவாதம் எழுந்துள்ளது. நயினார் நாகேந்திரன், தமிழிசை போன்றோர் தங்களது சொந்தச் செல்வாக்கால் லைம் லைட்டில் இருக்கிறார்கள். குமரியில் பொன்னார் தான் வேட்பாளர் என்பதை பலரும் மறந்து போய்விட்டதாக அவரது ஆதரவாளர்கள் நொந்துக் கொள்ளும் நிலையில் உள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.303 கோடி பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.1,43,05,91,000, ரூ. 1,21,65,09,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.93,43,000 மதிப்பில் போதைப் பொருட்கள் உட்பட ரூ.303,63,00,000 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டபின் பேசிய அவர், நாட்டிற்காக ரத்தம் சிந்த தயாராக உள்ளோம். ஆனால், மதத்தின் பெயரில் யாரையும் சித்ரவதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மத நல்லிணக்கத்தை விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஆய்வக உதவியாளர், கணினி ஆபரேட்டர், சட்ட உதவியாளர், மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 1,353 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதி உள்ளவர்கள் வரும் ஏப்.30ஆம் தேதிக்குள் <
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவர், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இட்ஸ் ஃபேஷன் பேபி என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் (மாதம் ரூ.8,500) வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நீங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தால் உங்களுக்கும் இந்தப் பணம் கிடைக்கும். தட்டுத் தடுமாறி வரும் மக்களை முன்னேற்றுவோம். ஒரே அடியில் இந்தியாவில் இருந்து வறுமையை ஒழிப்போம் எனக் கூறியுள்ளார்.
நாகையில் பாஜகவினர் பிரசாரத்தின் போது வைத்த பட்டாசு வெடியால் குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை கோட்டாச்சியர் அலுவலகம் அருகே பிரசாரம் செய்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்று, பாஜகவினர் பட்டாசுகளை வெடித்தனர். அப்போது பரவிய தீயால், அருகில் இருந்த 2 குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து நாசமாயின. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர்கள் ஜேக்ஸ் மற்றும் லாக்கி ஃபெர்குசன் களமிறக்கப்படுவார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் லாக்கி ஃபெர்குசன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவரைத் தொடர்ந்து, கடந்த 2 வருடங்களாக T20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த வில் ஜேக்ஸையும் RCB அணி பயன்படுத்தாமலே வைத்துள்ளது.
காஃபியை மிதமான அளவில் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு பயன்கள் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு 2 முதல் 5 கப் வரை காஃபி குடிப்பது இறப்பு அபாயத்தைக் குறைக்கும். நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் காஃபி பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம், சுமார் 12 கப் காஃபியை உட்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாள்களே இருக்கும் நிலையில் தேசியத் தலைவர்கள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை தமிழகம் வர இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடுத்தடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.