India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இங்கிலாந்தில் சிரிக்கும் வாயுவை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மெர்சர் என்ற 24 வயது கர்ப்பிணி தீவிர சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். சிரிக்கும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை அவர் நாளொன்றுக்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 6 மாத கர்ப்பிணியான மெர்சர், நைட்ரஸ் ஆக்சைடு பயன்பாடு காரணமாக நுரையீரல் ரத்த உறைவு பிரச்னையால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகையில் பாஜகவினரின் வெடியால் ஏற்பட்ட தீ விபத்தால் வீடுகளை இழந்த மக்கள் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை கோட்டாச்சியர் அலுவலகம் அருகே பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்று வெடித்த வெடியால் ஏற்பட்ட தீ அருகில் இருந்த குடிசை வீடுகளுக்கு பரவி எரிந்து நாசமாயின. இதற்கு இழப்பீடு வழங்க எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் பாஜக நிர்வாகியை விடுவிப்போமென மக்கள் ஆவேசமாகினர்.
இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே நமது முதல்வர் எடுத்துக்காட்டாக இருக்கிறார் என அமைச்சர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், கனடா பிரதமரே காலை உணவுத் திட்டத்தை கொண்டுவரப் போவதாக கூறியுள்ளார். இத்திட்டத்தை தெலங்கானாவிலும் செயல்படுத்தி வருகின்றனர் என்றார். மேலும், மகளிர் விடியல் பயண திட்டத்தை கர்நாடகா மாநிலத்திலும் செயல்படுத்தி உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார யுக்திகளை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுகவினரின் போஸ்டர் பிரசாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. திருப்பூரின் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜி pay என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், Scan செய்யுங்கள் Scam பாருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்தால் பாஜகவின் ஊழல் என்ற பெயரில் வீடியோ ஒளிபரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் வேளையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்வதற்காக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தமிழ்நாடு வருகின்றனர். நாளை தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி நெல்லை, கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். நாளை மாலை கோவையில் நடைபெறும் கூட்டத்தில் ராகுலுடன், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார். ஏப்.15இல் தமிழ்நாடு வரும் கார்கே கடலூர், புதுச்சேரியில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால், நீரிழிவு நோயாளிகள் ஜிம்முக்கு செல்லும் முன் உடலின் சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியமாகிறது. ஒரு வேளை சர்க்கரை அளவு குறைந்தால் வாந்தி, மயக்கம் அல்லது உடற்சோர்வு ஏற்படலாம். இதனால், சுயநினைவை இழக்க நேரிடலாம். இதற்கு தீர்வாக மாவுச்சத்து நிறைந்த திண்பண்டங்களை ஜிம்முக்கு எடுத்து செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
கடும் வெயிலின் காரணமாக கேரளாவில் கடந்த 10 நாள்களில் 900க்கும் மேற்பட்டோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தினசரி 90 பேர் பாதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இங்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் பகல் வேளையில் அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித், விஜய். இவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டாலும், அவர்கள் நல்ல நண்பர்களாவே இருக்கின்றனர். இந்நிலையில், விஜய், அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்த அஜித் ஒரு ரூபாய்கூட சம்பளமாக வாங்கவில்லை என இயக்குநர் ஜானகி செளந்தர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பயனாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆபாச காட்சிகளை மங்கலாக்கி காட்டும் அம்சத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து பெற்றோர் அச்சம் கொள்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக இந்த அம்சம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
Sorry, no posts matched your criteria.