News April 18, 2024

இலவச வாகன வசதிக்கு ‘1950’ அழைக்கவும்

image

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவானதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 6.14 லட்சம் இருப்பதாகக் கூறிய அவர், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவித்தார். மேலும், இலவச வாகன வசதிக்கு ‘1950’ என்ற எண்ணில் அழைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

News April 18, 2024

நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ்

image

நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்ட கட்சி காங்கிரஸ் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் பன்முகத்தன்மை, பல மொழிகள், பல கலாசாரம், மாறுபட்ட வரலாறு, மாறுபட்ட உணர்வுகளை ஏற்ற கட்சி காங்கிரஸ் என்றார். ஆனால் பாஜகவோ ஒரே வரலாறு, ஒரே நாடு, ஒரே மொழியை மக்கள் மீது திணிக்க விரும்புகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

News April 18, 2024

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?

image

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம். அதன்படி, பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி அல்லது அஞ்சலகச் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓய்வூதிய ஆவணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு, ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

News April 18, 2024

ஒருமுறை அழுத்தினால் 2 வாக்கு : உச்சநீதிமன்றம் கேள்வி

image

இவிஎம், விவிபேட் செயல்பாடு குறித்த தேர்தல் ஆணையத்தின் தகவலுக்கும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் தகவலுக்கும் இடையே ஏன் முரண்பாடு உள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் 2 வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளதா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, முன்னதாக நடந்த மாதிரி வாக்குப்பதிவு சரியாக நீக்கப்படவில்லை என்றால் மட்டுமே அவ்வாறு நடக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

News April 18, 2024

நயினார் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

ரயிலில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரைத் தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அத்தொகுதி சுயேச்சை வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில், நயினார் நாகேந்திரன் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News April 18, 2024

ஐபிஎல்லில் கற்றுக் கொள்ள ஒன்றுமே இல்லை

image

ஐபிஎல் தொடரில் முஸ்தஃபிசூர் கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜலால் யூனுஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், முஸ்தஃபிசூரின் ஃபிட்னஸ் குறித்து தான் எங்களுக்குக் கவலை. அவர் 100% ஃபிட்டாக இருக்க வேண்டும். CSK அணிக்கு அவருடைய ஃபிட்னஸ் பற்றி எந்தக் கவலையும் இல்லை. வேண்டுமானால் அவரிடமிருந்து CSK வீரர்கள் கற்றுக் கொள்ளட்டும் என விமர்சித்துள்ளார்.

News April 18, 2024

படத் தோல்வியால் அரசியலுக்கு வருகிறாரா விஷால்?

image

2004இல் செல்லமே மூலம் அறிமுகமாகி, 20 ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் விஷால். 2018இல் வெளியான இரும்புத்திரை, சண்டைக்கோழி 2க்குப் பிறகு வந்த 7 படங்களுக்கும் போதிய வரவேற்பில்லை. இந்தச் சூழ்நிலையில் விரைவில் அவர் கட்சி தொடங்கப்போவதாகக் கூறியுள்ளார். இதைப் பார்த்த திரையுலகத்தினர், படத் தோல்வியால் அரசியலுக்குச் செல்வதாக கூறுகின்றனர். ஆனால் உண்மைக் காரணத்தை விஷாலே அறிவார்.

News April 18, 2024

968 காலிப் பணியிடங்கள்; இன்றே கடைசி நாள்

image

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட 968 இளநிலைப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விருப்பமுள்ளோர் <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முதல் தாள் தேர்வை ஜூன் 4 முதல் 6க்குள் நடத்தத் தற்காலிகமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தாள்-2 தேர்வுக்கான தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

News April 18, 2024

விஜயகாந்த் மகன் மீது வழக்குப்பதிவு

image

தேர்தல் விதிகளை மீறியதாக விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக உரிய அனுமதியின்றி தெப்பக்குளம் அருகில் பிரசாரம் செய்ததாக, தேர்தல் பறக்கும்படையினர் அளித்த புகாரின் பேரில், சண்முக பாண்டியன், நடிகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 18, 2024

உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பாரா ரிஷப் பண்ட்?

image

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், ரிஷப் பண்ட் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில், சிறப்பாக பேட்டிங் செய்து வந்த அவர் தற்போது விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தி வருகிறார். குஜராத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில், 2 கேட்ச் மற்றும் 2 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார். குறிப்பாக, 2 கேட்சுகளையும் அவர் பறந்து பிடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

error: Content is protected !!