India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி, “NDA கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாம் தோற்கவில்லை. தோற்கவும் மாட்டோம். நாம் தோற்றுவிட்டது போன்ற மாயத்தோற்றத்தை காங்கிரஸ் உருவாக்குகிறது. கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற எம்பிக்களை விட நாம் அதிக எம்பிக்களை இந்த முறை பெற்றிருக்கிறோம். INDIA 2 கூட்டணி இன்னும் பிளவுபட்ட வீடுதான்” என்று பெருமைப்பட கூறினார்.
நீட் யுஜி தேர்வு முறைகேடு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குளறுபடிகள் குறித்து NTA அளித்துள்ள விளக்கம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை என்று கூறியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் திடீரென வெளியானது சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும், அத்தேர்வை ரத்து செய்து பழைய முறைப்படி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும்,
பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். NDA கூட்டணி சரியான பாதையில் செல்வதை தமிழகத்தில் கிடைத்த வாக்குகள் காட்டுவதாகக் கூறிய அவர், தென்மாநிலங்களில் மக்களின் ஆதரவை பெற்றுள்ள பாஜக பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார். மேலும், 10 ஆண்டுகால ஆட்சியை பாராட்டி பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி எனக் கூறினார்.
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் 7இல் NDA கூட்டணி அதிக ஆதரவை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சிறந்த நிர்வாகத்தை வழங்கிய நம் மீதான நம்பிக்கையில்தான், மக்கள் நமக்கு 22 மாநிலங்களில் NDA-க்கு எம்.பி.,க்களை அளித்துள்ளனர் என்ற அவர், தேசத்தின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன் என்றார். அத்துடன், தனக்கு என்றும் தேசமே முதன்மையானது எனவும் கூறினார்.
தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிரதமர் பதவிக்கு மோடியின் பெயரை பிஹார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் முன்மொழிந்துள்ளார். பிஹாரில் நிலுவையில் உள்ள பணிகளை முடித்துத் தர வேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்க்கட்சிகளால் 2029இல் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றார். NDA கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படவில்லை என்று தெளிவுப்படுத்தி அவர், மோடியின் தலைமையில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.
பாஜக தலைவர்களின் பரப்புரையால்தான் ஆந்திராவில் வெற்றி சாத்தியமானது என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். NDA கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில் பேசிய அவர், “உலக அரங்கில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி, உலகளவில் நாட்டின் பொருளாதாரத்தை 5ஆவது இடத்திற்கு உயர்த்தியவர் மோடி. சரியான நேரத்தில் மோடி என்ற மிகக் சரியான தலைவரை இந்தியா பெற்றுள்ளது” என்று புகழாரம் சூட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் அனைவரும் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்திருக்கிறது. நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலய அரங்கில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
புதிதாக அமையவிருக்கும் மோடி 3.0 அமைச்சரவையில் ரயில்வே அமைச்சகத்தை ஐக்கிய ஜனதாதளத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் நிர்பந்திக்கிறார். இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் எம்பி லவ்லி ஆனந்த், “ரயில்வே அமைச்சகம் எப்போதுமே ஐக்கிய ஜனதா தளத்துக்குதான் வழங்கப்படும். இந்த முறையும் கேட்டிருக்கிறோம்” என்றார். ஆனால், நிதி, ரயில்வே போன்ற முக்கிய அமைச்சகங்களை தன்வசம் வைத்துக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான தங்களின் கொள்கை, நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளார். நீட், பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கு எதிரானவை, கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை, சமூகநீதிக்கு எதிரானவை, நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.