News June 7, 2024
ரயில்வே அமைச்சகத்தை கேட்கிறது JDU

புதிதாக அமையவிருக்கும் மோடி 3.0 அமைச்சரவையில் ரயில்வே அமைச்சகத்தை ஐக்கிய ஜனதாதளத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் நிர்பந்திக்கிறார். இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் எம்பி லவ்லி ஆனந்த், “ரயில்வே அமைச்சகம் எப்போதுமே ஐக்கிய ஜனதா தளத்துக்குதான் வழங்கப்படும். இந்த முறையும் கேட்டிருக்கிறோம்” என்றார். ஆனால், நிதி, ரயில்வே போன்ற முக்கிய அமைச்சகங்களை தன்வசம் வைத்துக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
டிமான்டி காலனி 3ம் பாகம் படப்பிடிப்பு துவக்கம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவான டிமான்டி காலனி 1 மற்றும் 2 பாகங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் 3ம் பாகத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் முடிந்த நிலையில், படப்பிடிப்பும் பூஜை விழாவுடன் துவங்கியுள்ளது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
News July 8, 2025
’₹8,000 கோடிக்கு வெளிநாட்டு பயணம்: காங்., விமர்சனம்’

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவிக்கு பாக்., நியமிக்கப்பட்டதில் இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்., சேர்ந்த ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். பாக்., இந்த வாய்ப்பு கிடைக்காமல் தடுப்பதில் PM மோடி தோல்வியடைந்து விட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ₹8,000 கோடிக்கு சுற்றுப்பயணம் செய்து, எந்த நாட்டின் ஆதரவை பெற்றார் எனவும் கேள்வி எழுப்பினார்.
News July 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.