India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
INDIA கூட்டணி பக்குவம் பெற மக்கள் அவகாசம் தந்துள்ளனர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். INDIA கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தனித்து போட்டியிட்டதும் அதிக இடங்களை பெற முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்ததாக கூறிய அவர், அதை சரிசெய்ய மக்கள் தங்களுக்கு அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மே.வங்கத்தில் மம்தா, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐஎஃப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC) வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் <
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ஆம் தேதி ( திங்கள்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான ஜூன் 10ம் தேதி அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் என்று சமூக நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
‘கில்லி’ படத்தின் ரீரிலீஸுக்கு கிடைத்த வெற்றி, பல படங்களை ரீரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்களை தூண்டியுள்ளது. அந்த வரிசையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய, ‘தீனா’ படம் ரீரிலீஸாகி வரவேற்பை பெற்றது. தற்போது, அவர் இயக்கிய ‘கஜினி’ படம் ரீரிலீஸான நிலையில், விஜய் பிறந்தநாளில் ‘துப்பாக்கி’ படமும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அவர் இயக்கிய ‘ரமணா’ படத்தின் ரீரிலிஸுக்கு விஜயகாந்த் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தரவரிசை பட்டியலை <
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் ஏ.ஜே.டி ஜான்சிங் இன்று காலமானார். நெல்லையை சேர்ந்த இவர் இந்திய காடுகள் அனைத்தையும் அறிந்தவர். இந்தியக் காடுகள் பற்றியும், காட்டுயிர்கள் பற்றியும் அவர் எழுதியுள்ள நூல்கள் அரிய ஆவணங்கள். அவரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்திய வனப்பணி அலுவலர்கள் (IFS officers) நாடு முழுவதும் பணியாற்றுகிறார்கள். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சமூகநீதிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் தேர்வை அழிக்காமல், திமுக அரசு ஓயாது என்று தனது X வலைதள பக்கத்தில் அவர் சூளுரைத்துள்ளார். முன்னதாக, மக்களவைத் தேர்தல் பரப்புரைகளில் நீட் தேர்வை INDIA கூட்டணி அரசு அமைந்ததும் ரத்து செய்வோம் என்று கூறியிருந்தார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவில் $4.8 பில்லியன் உயர்ந்து, $651.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதே நேரம், தங்கத்தின் கையிருப்பு $56 மில்லியன் குறைந்து, $212 மில்லியனாக குறைந்துள்ளது. Special Drawing Rights (SDR) பொறுத்தமட்டில், $17 மில்லியன் குறைந்து, $18.118 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.48ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் திறப்பு நாளான ஜூன் 10ஆம் தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப்பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள், அந்தந்த பள்ளியிலேயே ஆதார் எண்களை பதிவு செய்யலாம் மற்றும் ஆதார் எண்களை புதுப்பிக்கலாம் என்றும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
பட்நாவிஸின் ராஜினாமாவை ஏற்க பாஜக தலைமை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உ.பி மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் பாஜக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். 80 தொகுதிகளை கொண்ட உ.பியில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது.
Sorry, no posts matched your criteria.