News April 27, 2024

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் எப்போது?

image

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைபெறுமென அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பேட்டியளித்த அவர், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு கடன் கொடுத்துள்ளோம். கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

News April 27, 2024

கேரளாவில் பாஜகவுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும்

image

கேரளாவில் பாஜகவுக்கு 10 இடங்கள் கிடைக்குமென பிரதமர் கூறுகிறார். அதில் பூஜ்ஜியம் வேண்டுமானால் கிடைக்கும். பூஜ்ஜியத்துக்கு முன்னால் உள்ள அந்த ஒன்று கிடைக்காதென கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நேற்று வாக்களித்த பின்னர் பேசிய அவர்,‘எல்லா காலத்திலும் வகுப்புவாத கட்சிகளுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு கொண்டது சிபிஎம். ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் பாணி ஆகும்’ என்றார்.

News April 27, 2024

இரண்டாம் கட்டத்தேர்தலில் 63.50% வாக்குப்பதிவு

image

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.50% வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், திரிபுராவில் அதிகபட்சமாக 79.46 % வாக்குகளும், குறைந்தபட்சமாக உத்தரபிரதேசத்தில் 54.85% வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News April 27, 2024

கேரளாவில் தாமரை மலர வேண்டுமென்பதே ஆசை

image

கேரளாவில் தாமரை மலர வேண்டுமென்பது தான் எனது ஆசை என நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மாவும் நடிகையுமான மேனகா தெரிவித்துள்ளார். நேற்று திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள வாக்குச்சாவடியில் மேனகா வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், ‘புதிய ஆட்சி வந்தால் தானே மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல ஒரு ஆட்சி வரும் என்று என் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

News April 27, 2024

ஏப்ரல் 27 வரலாற்றில் இன்று!

image

➤ 1667 – ஜான் மில்டன் தான் எழுதிய ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார். ➤ 1981 – PARC முதன்முறையாக கணினிச் சுட்டியை அறிமுகப்படுத்தியது. ➤ 1986 – செர்னோபில் அணு உலை விபத்தை தொடர்ந்து பிரிப்பியாத் நகரத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். ➤ 1994 – தென்னாபிரிக்காவில் முதல்முறையாக கறுப்பினத்தவர் வாக்களித்தனர் ➤ 2005 – ஏர்பஸ் ஏ380 வானூர்தியின் முதல் சோதனை நடைபெற்றது.

News April 27, 2024

மீண்டும் தந்தையானார் க்ருணால் பாண்டியா!

image

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் க்ருணால் பாண்டியா – பன்குரி தம்பதிக்கு 2ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 வயதில் கபீர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், ஏப்.21ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு, ‘வயு க்ருணால் பாண்டியா’ என பெயரிட்டுள்ளனர். மனைவி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை க்ருணால் பாண்டியா தனது இன்ஸ்டாவில் பகிர வாழ்த்துகள் குவிகிறது.

News April 27, 2024

விரைவில் பொதுப்பணிக்கு திரும்பும் பிரிட்டன் மன்னர்

image

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் பொதுப்பணிக்கு திரும்ப இருப்பதாக பிரிட்டன் அரச குடும்பம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து சிகிச்சை பெறுவதற்காக பொது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மன்னர் சார்லஸின் உடல்நலம் குறித்து வதந்தி பரவிய நிலையில், இத்தகவலை பிரிட்டன் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.

News April 27, 2024

பாஜக 400 இடங்களில் வெற்றி கேட்பது இதற்கு தான்!

image

ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜஹீராபாத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடந்த பிரசார பேரணியில் பேசிய அவர், ‘அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை மாற்றுவதுடன், இடஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்திற்காக மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற வைக்குமாறு பாஜக கேட்கிறது’ என விமர்சித்துள்ளார்.

News April 27, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான் சிறப்பு ▶குறள் எண்: 14
▶குறள்: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
▶பொருள்: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

News April 27, 2024

மகேந்திரகிரியில் பி.எஸ் என்ஜின் சோதனை வெற்றி

image

மகேந்திரகிரியில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் பி.எஸ் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மூன்றாவது முறையாக பி.எஸ் என்ஜின் சோதனை வெற்றிகரமான நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் துல்லியமாக கிடைத்துள்ளன எனவும், ராக்கெட்டின் எடையை குறைக்கும் வகையில் சில மாறுதல்கள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!