India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிளாஸ்டிக் சர்ஜரி மோகம் அதிகரித்து வருகிறது. அதிலும் விசித்திர தோற்றத்திற்கு மாற சிலர் ஆசைப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஜோலீன் டாசன்(29) தன்னை ஒரு பூனையை போல மாற்றிக்கொள்ள ஆசைப்பட்ட, சுமார் 6.6 லட்சம் செலவும் செய்துள்ளார். அவரது மூக்கு, தாடையின் வடிவங்கள் மாற்றப்பட்ட நிலையில், ஏனோ அம்மணிக்கு ஆசைப்பட்டது ரிசல்ட் கிடைக்கவில்லை. இப்போது பழைய உருவத்திற்கும் மாற முடியாமல் தவிக்கிறார். என்னத்த சொல்ல!
இந்த வருஷம் எல்லாமே CSK-க்கு எதிரா இருக்கு. இதுவரை, 9 மேட்சில் 2-ல் மட்டுமே ஜெயிச்சிருக்காங்க. இனி எங்க பிளே-ஆப் போறது என நம்பிக்கை இழக்க வேண்டாம். யாரோ ஒரு முரட்டு CSK ஃபேனின் கால்குலேஷன் 2-வது படத்தில் பாருங்க. மீதி இருக்கும் 5 மேட்சும் CSK ஜெயிச்சு, மத்த டீம்ஸ், இதுல இருக்குற படி மத்த டீம்களின் மேட்ச் முடிஞ்சா போதும்! CSK பிளே-ஆப் போயிடலாம். இதெல்லாம் ஓகேதான். ஆனா CSK ஜெயிக்கணுமே?
<<16252222>>ஊர்ந்து<<>> என CM ஸ்டாலின் கூறியது அவையில் பேசுபொருளான நிலையில், மக்கள் #ByeByeStalin சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக் கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி என இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி, போதைப்பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி என அவர் விமர்சித்தார். பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலை.யே சாட்சி என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
தங்கம் விலை இம்மாதம் கடும் உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் 1 கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் (28 நாள்களில்) கிடுகிடுவென உயர்ந்து இன்று (ஏப்.29) ஒரு சவரன் ₹71,840-ஆக விற்பனையாகிறது. அதாவது இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,760 உயர்ந்துள்ளது. நாளை(ஏப்.30) அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் PM மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கடந்த 23-ம் தேதி நடந்த இக்கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றம், எல்லை மூடல், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 5 நாள்களாக எல்லையில் பரபரப்பு நிலவும் நிலையில், நாளை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
TN பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு அதிகாரமிக்க பொறுப்பு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். <<16247938>>ஆந்திராவில் <<>>இருந்து ராஜ்ய சபா எம்.பி. ஆக்கப்பட்டு பின்னர் மத்திய அமைச்சரவையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அதற்கு காரணம் அண்ணாமலை தானாம். அவர் TN அரசியலில் தீவிரம் காட்ட விருப்பம் தெரிவித்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
14 வயதில் ஐபிஎல்-ல் சதமடித்தன் மூலம் ஒரே நாளில் உச்சத்துக்கு சென்றுவிட்டார் சூர்யவன்ஷி. ஹர்ஷா போக்ளே தொடங்கி உள்ளூர் ரசிகர்கள் வரை புகழ்ந்து வருகின்றனர். அதே நேரம், சிறுவயதில் கிடைக்கும் வெளிச்சத்தில், சூர்யவன்ஷி கவனம் இழந்துவிடக் கூடாது என்கின்றனர். சச்சின்-வினோத் காம்ப்ளி உதாரணத்தை சுட்டிக்காட்டி, சூர்யவன்ஷி சச்சின் வழியில் செல்ல வேண்டும்; காம்ப்ளி வழியில் அல்ல என்கின்றனர்.
மதுரை K.K.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் தொட்டியில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ICU-வில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளி இயங்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி சென்றுள்ள TN பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தலை திறம்பட எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், TN-ல் பாஜகவை வளர்ப்பது தொடர்பாக நயினாருக்கு பல்வேறு ஆலோசனைகளை அமித்ஷா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
எத்தனையோ பேர் இருக்க கோலி மட்டும் எப்படி ரன் மிஷின் ஆனார்? கோலி மட்டுமல்ல, எல்லா ஜீனியஸ்களின் மூளை செயல்படும் விதத்திலும் ஒரு பேட்டர்ன் உண்டாம். அதை System 1, System 2 என உளவியலாளர்கள் பிரிக்கிறார்கள். சாதாரண யோசனைகளுக்கு System 1, மூளையைக் கசக்குகிற திட்டங்களுக்கு System 2. இந்த System 2-வை பயிற்சியின் மூலம் நம் System 1 ஆகவே மாற்றி சாதிக்கலாமாம். இப்போ தெரிகிறதா கோலி ஏன் கிங்குன்னு..
Sorry, no posts matched your criteria.