India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெருநாய்களை பிடித்தாலும் அவற்றுக்கு கருத்தடை & புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திவிட்டு, அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விட்டுவிட வேண்டும் என SC <<17481254>>தீர்ப்பளித்துள்ளது<<>>. அதேநேரம், ரேபிஸ் தொற்று பாதித்த நாய்களையும், வெறிப்பிடித்த நாய்களையும் தெருவில் விடவும் தடை விதித்துள்ளது. தெருநாய்கள் தொடர்பாக அனைத்து மாநிலங்களையும் ஆலோசித்து தேசியக் கொள்கை உருவாக்கவும் மத்திய அரசை SC வலியுறுத்தியுள்ளது.
ஆபிசில் இருக்கும் போது, சாப்பிட்ட பிறகு, பயங்கரமாக தூக்கம் வரும். இதனால், வேலையும் கேட்டுவிடும். அப்படி, தூக்கம் வராமல் இருக்க..
*மதியம் எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
*நிறைய தண்ணீர் குடியுங்கள்.
*சிறிது தூரம் நடப்பது, உடலை சுறுசுறுப்பாக்கி, மந்த நிலையை விரட்டும்.
*கண்டிப்பாக காஃபினை தவிர்க்கவும்.
*தூக்கம் வந்தால், சுவாசப்பயிற்சி செய்யவும்.
கல்வியை காதலுடன் ஒப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வி என்பது முதலில் ஒன் சைட் லவ்வாகவே இருக்கும், பிறகு நீங்கள் அதனை காதலிக்க தொடங்கியதும் அது டபுள் சைட் லவ்வாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். எனவே, மாணவர்கள் அடுத்தடுத்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு இங்கே <<17481425>>கிளிக் <<>>செய்யவும்.
1. சென்னப்ப நாயக்கர்
2. உத்தர பிரதேசம்
3. உதடு
4. 21%
5. அடிலெய்டு மைதானம், ஆஸ்திரேலியா
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை Ex அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 2023-ல் லண்டனுக்கு அரசுமுறை பயணமாக சென்றபோது இந்திய மதிப்பில், அரசு பணம் சுமார் ₹13,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். GK மணி, அருள்மொழி, முரளி சங்கர் உள்ளிட்டோர் அடங்கிய 21 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீகாந்திக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக கட்சியின் நிகழ்ச்சிகளில் ராமதாஸுக்கு அருகில் அமர்ந்து வந்த ஸ்ரீகாந்தி, தற்போது அதிகாரப்பூர்வமாக கட்சிக்குள் நுழைந்துள்ளது அன்புமணி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தவெக மாநாட்டுக்கு அமைச்சர் பி.மூர்த்தி பல்வேறு தொந்தரவுகளை கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா மேடையிலேயே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய மூர்த்தி, தவெக மாநாட்டுக்கு தாங்கள் எந்த இடையூறும் செய்யவில்லை என கூறியுள்ளார். சேர் கொடுக்க மறுப்பது, வாய்க்கால் தோண்டுவது போன்ற எந்தவித சில்லித்தனமான செயல்களிலும் திமுகவினர் ஈடுபட மாட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அத்துறையின் ஆணையர் பொன்னையா அனுப்பியுள்ள கடிதத்தில், VPRC, PLF மூலமாக தூய்மை பணியில் ஈடுபடுவோருக்கு வாரம் ஒருமுறை சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தூய்மை பணியாளர்கள் நீண்ட நாள்களாக இக்கோரிக்கையை அரசுக்கு வைத்திருந்தனர்.
விருதுநகரில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முறையிட்ட பெண்களிடம், ‘கம்மல் இருந்தால் ₹1,000 தர முடியாது’ என அமைச்சர் <<17480686>>KKSSR<<>> பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். இதற்கு அமைச்சர், தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் Ex செய்தித்தொடர்பாளர் KS ராதாகிருஷ்ணன் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார். நெல்லையை சேர்ந்த இவர், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். கடந்த 2022-ல் மல்லிகார்ஜுன கார்கேவை விமர்சனம் செய்ததற்காக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 1989, 1996 தேர்தல்களில் கோவில்பட்டியில் போட்டியிட்ட இவர், தென் மாவட்டங்களில் இப்போதும் திமுகவின் முகமாக அறியப்படுகிறார்.
Sorry, no posts matched your criteria.