India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤எளிதாக தோட்டத்தில் வளர்ந்தாலும், சளி, சைனஸ் அவ்வளவு ஏன் கிட்னி கல்லுக்கும் சிறந்த மருந்தாக கற்பூரவல்லி உதவும்.
➤கற்பூரவள்ளி இலையின் சாற்றுடன், தேன் கலந்து குடித்தால், சளி & இருமல் விலகும்.
➤கற்பூரவல்லி இலைகளை நசுக்கி சொறி, அரிப்பு ஏற்படும் இடங்களில் பூசினால், தோல் நோய் விலகும்.
➤கற்பூரவல்லி இலையின் சாற்றை குடித்தால், அஜீரணக் கோளாறு விலகும். SHARE IT.
திமுக, அதிமுக, நாதக, பாஜகவை கடுமையாக அட்டாக் செய்ய விஜய் தொடங்கிவிட்டார். இந்நிலையில், எம்ஜிஆர் வளர்த்த அதிமுக யாரிடம் இருக்கிறது என்பதை விஜய்யே தேடி பார்த்து சொல்லட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவை விஜய் விமர்சனம் செய்வது அவர்களுக்குள் இருக்கும் புரிதல்தான்; ப்ரோவாக இருந்தாலும், அங்கிளாக இருந்தாலும் அவர் குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்றார்.
கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துகொண்டே வந்த நிலையில், இன்று ஒரே அடியாக ₹800 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ₹800 உயர்ந்து ₹74,520-க்கும், கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹9,315-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே அண்ணாமலையை ஓரங்கட்டுவதாக TN பாஜக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், நயினாரின் தேநீர் விருந்துக்காக சென்ற அண்ணாமலை தனியாக நின்று கொண்டிருந்தாராம். இதை கவனித்த அமித்ஷா, அவரை அருகே அழைத்துள்ளார். நயினார் உள்பட மூவரும் விருந்தில் பங்கேற்ற பின்பு தனித்தனியாக ஆலோசித்துள்ளனராம். இதனிடையே, அண்ணாமலை காலத்தில் பூத் கமிட்டி பணிகள் முழுமையடையவில்லை என நயினார் BL சந்தோஷிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளாராம்.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதில் இருந்து மீண்டார். இதனைத் தொடர்ந்து, கணவரிடம் இருந்து பிரிந்தார். இவ்வாறு பல தடைகளைக் கடந்து வந்ததால், முன்பு போல் தற்போது தன்னால் இருக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் நெருக்கமான கதைகளில் மட்டுமே நடிப்பது, உடற்பயிற்சி ஆகியவையே பிரதானமாம்.
◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும்.
➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள்.
➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி (83) உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. நல்கொண்டா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்வான சுதாகர் ரெட்டி, 2012 -19 வரை இந்திய கம்யூ., கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான தூதராகவும் செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இவர் அரசுப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதாகவும் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், கடந்த ஜன.20 முதல் ஜோர்கன் கே ஆண்ட்ரூஸ் இந்தியாவில் உள்ள USA தூதரகத்தின் இடைக்கால பொறுப்பாளராக உள்ளார்.
ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததில் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அத்துடன் நேற்று நடைபெற்ற BJP பூத் கமிட்டி மாநாட்டில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியது மீண்டும் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை USA, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் நடத்துகின்றன. இப்போட்டிகள் 16 மைதானங்களில் நடைபெறுகின்றன. கடைசியாக 1994-ல் இத்தொடரை USA நடத்தியிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ உடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போட்டிகளைக் காண ரஷ்ய அதிபர் புடின் வரலாம் எனவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.