India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணுவத்தின் செயல்பாடுகள் எப்போதும் ரகசியமானவை. அதேபோல், அவர்கள் பயன்படுத்தும் கைக்கடிகாரங்களும் தனித்துவமானவை. வெயில், மழை, குளிர் என அனைத்து தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ற கடிகாரங்களையே அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த கடிகாரங்கள், காலத்திற்கு ஏற்றார்போல் நவீன தொழில்நுட்பங்களுடன் மாற்றம் கண்டு வருகின்றன. இவ்வாறான நவீன ஆர்மி வாட்ச் லிஸ்ட்டை மேலே பாருங்கள்.
திமுகவின் வேர் எங்கே இருக்கிறது என்பது கூட அமித்ஷாவுக்கு தெரியாது என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். வரும் தேர்தலில் திமுகவை காணாமல் போக செய்ய வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியிருந்தார். இதுகுறித்து பேசிய ரகுபதி, ஆழமாக பாய்ந்துள்ள திமுகவின் வேரை அமித் ஷா மட்டுமல்ல, யாராலும் அழிக்க முடியாது என்றார். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
இல. கணேசன் மறைவு, சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தை சேர்ந்த கவர்னரே இல்லை என்ற நிலை உருவானது. இதனால், ஹெச்.ராஜா கவர்னராக வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது. இந்த பட்டியலில் ஏற்கெனவே கவர்னராக இருந்த தமிழிசையும் இருக்கிறாராம். இதற்காகவே அவர் அண்மையில் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பரிசீலனையில் உள்ளனராம்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (மதியத்திற்கு மேல்) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் நயினாரின் போட்டோவை கடவுள் ராமரை போல் சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பகவான் ஸ்ரீராமருடன் தன்னை ஒப்பிட்டு பதாகைகள் வைக்க வேண்டாம் என்று பாஜகவினருக்கு நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நேற்று பதாகை வைத்திருந்ததை கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்றும், இதுபோன்று சித்தரித்து போட்டோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்திய அறிவியல் வரலாற்றில் பொன்னான நாள் இன்று. 2023-ல் இதே நாளில்(ஆக.23) தான் நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கியது. இதனால் நிலவில் கால்பதித்த 4-வது நாடு, தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதை கொண்டாடும் வகையில் ஆக.23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள்: Aryabhatta to Gaganyaan: Ancient Wisdom to Infinite Possibilities ஆகும்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘DUDE’ மற்றும் ‘LIK’ ஆகிய 2 படங்களும் அக்.17 அன்று வெளியாகவுள்ளன. இவ்வாறு தமிழ் சினிமா ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது முதல் முறையல்ல. இது கமல், ரஜினி காலத்தில் இருந்தே உள்ளது. இவ்வாறு ஒரே ஹீரோவின் நடிப்பில் ஒரே நாளில் வெளியான இரு படங்களை மேலே Swipe செய்து பாருங்கள். நீங்கள் இப்படி படம் பார்த்தது உண்டா?
தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ரேப் செய்து கொன்று புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் பணியாளர் அடையாளம் காட்டிய இடத்தில் எந்தவித உடல்களும் இல்லை என்பது SIT விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொய்யான புகார் அளித்ததாக பணியாளர் சின்னையா கைதாகியுள்ளார். அவரது வழக்கறிஞர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக & ஸ்டாலினை கடுமையாக விஜய் விமர்சித்தார். இந்நிலையில், விஜய்யின் குடும்பத்திற்கு கருணாநிதி உதவியதாக PHOTO மூலம் திமுகவினர் பதிலடி கொடுக்கின்றனர். நம்மால் பயனடைந்தவர்கள், நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. முன்னேறும் காலத்தில் கருணாநிதியும், திமுகவும் இவர்களுக்கு தேவைப்பட்டார்கள். ஆனால் முன்னேறிய பின்பு ‘துரோகி’ பட்டம் சூட்டுவது மோசமான அரசியல் என விமர்சிக்கின்றனர்.
சந்திரயான் 4 மற்றும் வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் ஆகியவற்றை விரைவில் செயல்படுத்தவுள்ளதாக ISRO தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பேசிய அவர், 2028-ல் தொடங்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பணிகள் 2035-க்குள் முழுமை பெறும் என உறுதியளித்தார். அதேநேரம், இந்த சிறப்புமிக்க நாளில் சுபான்ஷு சுக்லாவின் சாதனையை PM மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.