India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பை வான்கடே மைதானத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் Ex ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. 1972- 1987 வரை இந்திய அணிக்காக விளையாடிய சுனில் கவாஸ்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ஆயிரம் அடித்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்களை(34) அடித்தது என தனது காலக்கட்டத்தில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை நாங்கள் தம்பி என அழைப்பதாலேயே அவருடன் கூட்டணி வைப்போம் என்று அர்த்தமில்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் கட்சி தொடங்கியபோதும், உடல்நலக் குறைவுடன் இருந்தபோதும் தெரியாத விஜயகாந்த், மறைந்த பிறகே விஜய்க்கு அண்ணனாக தெரிவதாக சீமான் கூறியது உலகறிந்த உண்மை என கூறியுள்ளார். தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என கூறப்பட்ட நிலையில், இவ்வாறு பேசியுள்ளார்.
பாஜக, RSS-ன் இன்னொரு செயல் வடிவம் தான் விஜய் என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு காட்டமாக விமர்சித்துள்ளார். திமுக மீது வெறுப்பு அரசியலை தமிழ்நாட்டில் கட்டமைப்பதுதான் விஜய்யின் அரசியலாக இருக்கிறது என சாடிய அவர், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று சொல்வதன் மூலம் விஜய் தனது அநாகரிகத்தையும், தலைமை பண்பையும் குறைத்திருக்கிறார் என்பதைதான் பார்க்க முடிகிறது எனவும் விமர்சித்தார்.
Punjab & Sind வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 85 பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 30. தேர்வுமுறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல், உள்ளூர் மொழித்திறன். சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரை பிம்பத்தை வைத்தே அரசியல் நடக்கிறது, ஆனால் விஜய்யை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறார்கள் என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யின் ‘ஆட்சியில் பங்கு’ என்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர், ‘Uncle’ ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல என கூறியுள்ளார். தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைக் கொண்டிருக்கும் புதிய தமிழகம் கட்சி, தவெகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
➤இதன் 4 இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி நீங்கிவிடும்.
➤வியர்வை நாற்றம் அடிக்காமல் இருக்க, ஒரு கைப்பிடி பச்சிலை இலைகளைப் பறித்து நீரில் நன்கு ஊற வைத்து, அந்த தண்ணீரில் குளித்தால் உடல் நறுமணமாக இருக்கும்.
➤காது வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த இலையின் சாற்றை, சில சொட்டுகள் விட்டால் வலி நீங்கும்.
➤வாயுத்தொல்லை இருப்பவர்கள், இந்த இலையை பச்சையாக மென்று தின்றால் பிரச்னை சரியாகும்.
‘ஏன்மா வம்ப விலை கொடுத்து வாங்குற, உனக்கே இது நியாயமா இல்லையா?’ என ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஸ்ருதிஹாசனிடம் கேட்டுள்ளனர். இதற்கு இன்ஸ்டாகிராமில் கூலாக பதிலளித்துள்ள அவர், ப்ரீத்தி ரோல் துயரத்தில் உள்ளது. எனவே இதில் நியாயம், அநியாயம் என்றும் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். இப்படத்தில் தானாக ஒரு சிக்கலை தேடிச் செல்வது போன்று ஸ்ருதியின் ரோல் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்க என்ன நினைச்சீங்க?
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2000 உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோரை இழந்து, உறவினர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு ( ஆண், பெண்), ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதந்தோறும் ₹2000 வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற விரும்புவோர், தகுதியான ஆவணங்களுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்றால் ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம் என கேரள BJP துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக, வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், திருச்சூர் லோக் சபா தேர்தலில் சட்டவிரோதமாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, இவ்வாறு அவர் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காசாவுக்குள் மனிதநேய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதாக ஐ.நாவின் IPC அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இது முழுக்க முழுக்க பொய் என்றும், யூத அரசுக்கு எதிரான நவீன ரத்தம் மிகுந்த அவதூறு என்றும் இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு காட்டமாக கூறியுள்ளார். காசாவில் உள்ள ஒருவருக்கு ஒரு டன் வீதம் 2 மில்லியன் டன் உதவிப் பொருள்களை அனுமதித்துள்ளதாகவும் அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.