India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் இருவரும் விவாகரத்திற்குப் பிறகு தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அவனது பொம்மைகள் வழியனுப்புவது போன்ற இன்ஸ்டா போஸ்டை பகிர்ந்த அவர், மழலையர் பள்ளியோ..உயர்நிலைப் பள்ளியோ.. அதே கதைதான். என் மகன்கள் இப்போதும் பொம்மைகளுடன் விளையாடுகின்றனர். சில விஷயங்கள் மாறுவதேயில்லை எனப் பதிவிட்டு தனது மகன்களை நினைவு கூர்ந்துள்ளார்.
BSNL 4G சேவை தற்போது பயன்படுத்தப்படும் 4G போன்களில் வேலை செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது. 4G சேவைக்காக BSNL க்கு 700M HZ, 2100 M HZ ஆகிய 2 அலைவரிசையை அரசு ஒதுக்கியுள்ளது. இதில், 700M HZ அலைவரிசையை BSNL பயன்படுத்துகிறது. இது 5G சேவைக்கானது என்பதால் தற்போதைய 4G போனில் BSNL 4G கிடைக்காது.700MHZ கொண்ட 5G போனில் தான் கிடைக்கும். எனவே போனை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயது முதலே நீதிக்காக போராடிய பயமறியா தலைவர், அவசரநிலை காலத்தில் மாணவர் பருவத்திலேயே துணிச்சலுடன் போராடியவர் யெச்சூரி என புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
துலீப் கோப்பை இரண்டாவது போட்டியில் ‘India C’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் ‘India B’ அணி 357-5 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 111, பாபா இந்திரஜித் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். காயம் காரணமாக இரண்டாவது பந்திலேயே வெளியேறிய கேப்டன் ருதுராஜ் பின்னர் மீண்டும் களமிறங்கி 46* ரன்கள் எடுத்துள்ளார். முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என Infosys இணை நிறுவனர் நாராயண மூர்த்தி பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், குழந்தைகள் படிப்பதற்கு, பெற்றோர் வீட்டில் ஒழுக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என சமீபத்தில் அவர் பேசியது மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. வாரம் 70 மணி நேரம் வேலை செய்தால், குழந்தைகளுக்காக எப்படி நேரம் ஒதுக்க முடியும் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பணிக்கொடையை (Gratuity) தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கான இறப்பு, ஓய்வுகாலப் பணிக்கொடை ₹20 லட்சத்தில் இருந்து, ₹25 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கொடை உயர்வானது, கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. கற்பித்தல், ஆராய்ச்சி நோக்கத்துக்காக உடலை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீதாராம் யெச்சூரி மறைவிற்கு ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியா என்ற கொள்கையின் பாதுகாவலனையும், நமது நாட்டை பற்றிய நீண்ட புரிதல் கொண்டவரையும் இழந்து விட்டதாகவும் ராகுல் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், அவருடனான ஆக்கப்பூர்வமான உரையாடல்களை தவறவிடுவதாகவும் மனம் வருந்தியுள்ளார். தேசிய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக மம்தா வேதனை தெரிவித்துள்ளார்.
‘தி கோட்’ படத்தில் வரும் ‘மட்ட’ பாடலுக்கு நடனமாட, முதலில் நடிகை ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஒரு குத்துப்பாடலுக்கு மட்டும் நடனமாட தான் விரும்பவில்லை என அவர் மறுப்பு தெரிவித்தது, தற்போது தெரியவந்துள்ளது. ‘குண்டூர் காரம்’ படத்தில் நடிகர் மகேஷ்பாபுவுடன் இணைந்து இவர் நடனமாடிய ‘குர்ச்சி மடதபெட்டி’ பாடல் உலகம் முழுவதும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மறைந்த CPM பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நன்கு தமிழ் பேச கூடியவர். சென்னையில் பிறந்தவர் என்பதாலும், ஆரம்பகாலத்தில் தமிழ்நாட்டில் வசித்ததாலும் தமிழ் நன்கு அவருக்கு சரளமாக வரும். பொதுக்கூட்டங்களில் தமிழிலும் பேசுவார். வட இந்திய அரசியல்வாதிகளில் நன்கு தமிழ் பேசுவோரில் இவரும் ஒருவர். இதனால் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுக்கு தமிழக கட்சிகளுடன் இவரே வருவது உண்டு.
Sorry, no posts matched your criteria.