News October 8, 2024
லஞ்சம் ஒழிப்புத்துறைக்கே லஞ்சம்

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற ஷாக் சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. கந்தம்பட்டியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சதாசிவம் என்பவர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய அலுவலகத்திற்கு ரெய்டு வரும் முன் அலர்ட் செய்தால் மாதம் ₹50,000, முன்பணமாக ₹1 லட்சம் தருவதாக அவர் பேரம் பேசியுள்ளார். லஞ்சம் கொடுக்க வர சொல்லி அவரை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
Similar News
News November 14, 2025
வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த சதி: தேஜஸ்வி

பிஹாரில் இன்றைய வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த சதி நடப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் வெற்றியை அறிவிப்பதை தாமதப்படுத்தி, NDA கூட்டணி வெற்றியை முதலில் அறிவிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 14, 2025
Sports Roundup: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

*8 அணிகள் பங்கேற்கும் ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்குகிறது. *குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷெர்பேன் ரூதர்போர்ட் 2.6 கோடிக்கு MI அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். *Bondi ஓபன் ஸ்குவாஷில் ரதிகா சீலன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *உலகக் கோப்பை செஸ் 4-வது ரவுண்டில் பிரக்ஞானந்தா தோல்வி. *ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், மகளிர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார்.


