India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1. செல்போனில் இருந்து வரும் Blue Light கண்களில் கடும் நீர் வறட்சியை ஏற்படுத்தும். இதனால் கருவிழி பார்வைத் திறனை இழக்கும். 2. ஏராளமான வீடியோக்களை பார்ப்பதால் தேவையில்லாத பல தகவல்கள் மூளையில் ஸ்டோர் ஆகின்றன. இது சிந்தனைத் திறனை குறைக்கிறது. 3. மூளையின் செயல்திறன் குறைவதால் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. 4. தூக்கமின்மை நோயை உருவாக்குவதால் சர்க்கரை, ரத்த அழுத்தம் கூடவே சேர்ந்து விடுகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அண்ணா சாலை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியின் மூலம் மூன்றாண்டுக்குப் பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் வருண் சக்கரவர்த்தி. நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்ததால் மகிழ்ச்சியாகவும், மறு பிறவி எடுத்தது போலவும் உணர்கிறேன் என்றார். மேலும், TNPL தொடரில் விளையாடியது திறமையை வளர்க்க உதவியதாக கூறினார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திமுகவை தொடர்ந்து சீண்டி வருகிறார். நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “எனது தந்தை சென்னையில் இருக்கும் பாபாஜி ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வார். பக்தி பாரம்பரியத்தில் சிறந்த விளங்கும் பூமி தமிழ்நாடு. சித்தர்கள் மற்றும் மகான்களின் பூமி தமிழ்நாடு” எனக் கூறினார். தமிழ்நாட்டை திராவிட பூமி என திமுக கூறும் நிலையில், சித்தர்களின் பூமி என பவன் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஆண்டும் ஓரம்கட்டி, TRPஇல் உச்சத்தை தொடும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கிவருவது தெரிந்ததே. பிக் பாஸ் 18 சீசனில் Weekend Ka Vaar என்ற பெயரில் சல்மான் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தொகுத்து வழங்குவார் என அறியமுடிகிறது. ஒருநாள் ஷூட்டிங்கிற்கு ₹12 கோடி (சீசனுக்கு ₹250 கோடி) சம்பளமாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி முதன்முறையாக பதவியேற்ற தினம் இன்று. இதனைக் கொண்டாடும் விதமாக குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: குஜராத் முதல்வராக அக்.7 2001-இல் பதவியேற்றேன். முதல்வராகவும், பிரதமராகவும் அரசை நிர்வகிக்கும் பொறுப்புக்கு நான் வந்து 23 ஆண்டுகள் ஆகின்றன. என்னை போன்ற சாதாரண காரியகர்த்தாவுக்கு தலைமை பொறுப்பை வழங்கி அழகுபார்ப்பதே பாஜகவின் பெருந்தன்மை” எனக் கூறினார்.
காய்கறி, பழங்களுக்காக நாம் செலுத்தும் விலையில் விவசாயிகளுக்கு 30% மட்டுமே செல்வது RBI அறிக்கையில் தெரியவந்துள்ளது. 1 கிலோவுக்கு நாம் ₹100 செலுத்தினால் விவசாயிகளுக்கு ₹30 மட்டுமே கிடைக்கிறது. மீதமுள்ள 70% பணம் இடைத்தரகர்கள், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு செல்கிறது. தக்காளியில் 33%, உருளையில் 31%, வாழைபழத்தில் 31%, மாம்பழத்தில் 43% பணத்தை மட்டுமே விவசாயிகள் பெறுகிறார்கள்.
பூமியில் இருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வானில் தோன்ற உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிளேஸ் ஸ்டார், டி கரோனே போரியாலிஸ் ஆகிய பெயரில் அழைக்கப்படும் இந்த நட்சத்திரத்தை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காண முடியும். இந்த நட்சத்திரம் அடுத்த சில நாள்களில் எப்போது வேண்டுமானாலும் வானில் தென்படலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் உலக அரங்கில் இந்தியாவை இடம்பெற செய்த தீபா கர்மாகர், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 25 ஆண்டுகள் ஜிம்னாஸ்டிக்கில் கலக்கிய தீபா, WC தங்கம், Asiad, Commonwealth போட்டிகளில் வெண்கலம், 2016 ஒலிம்பிக்கில் முதல் முறையாக Final-க்குள் நுழைந்த இந்தியர் என பலமுறை நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தீபா கர்மாகர் ஓய்வு பெறுவது இந்திய ஜிம்னாஸ்டிக்குக்கு பேரிழப்பாகும்.
சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அண்மையில் சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற அருண், “ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரிகிற மொழியில் பாடம் எடுக்கப்படும்” என நிருபர்களிடம் கூறினார். அவரது பேச்சு மனித உரிமையை மீறும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு அர்த்தம் கேட்டு 14-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.