India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Ksca invitational tournament 2024 தொடரில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர். கோவா அணிக்காக ஆடிவரும் அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 9 விக்கெட்டுகளை தூக்கினார். இதேபோல் இனி வரும் போட்டிகளிலும் ஜொலிக்கும் பட்சத்தில் அவருக்கு இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று டிடிவி குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையின் கைகள் கட்டுப்பட்டுள்ளன, திமுக வட்டச் செயலாளர் கூட ஆய்வாளரை மிரட்டும் சூழல் உள்ளதாக விமர்சித்த அவர், இ.பி.எஸ் புரோக்கரேஜ் கம்பெனி மாதிரி ஆட்சி நடத்தியதால், மக்கள் திமுகவிடம் பொறுப்பு தந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் நடைபெற்ற திருமணத்தில் மணமகளிடம் மணமகனின் நண்பர்கள் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. அதில், ‘கணவரை நைட் ஷோ சினிமாவிற்கு அனுப்புவேன். செலவுக்கு காசு கொடுப்பேன். நண்பர்களுடன் கோவா, பாண்டிச்சேரி, தாய்லாந்து TRIP-க்கு அனுப்புவேன். கணவர் நண்பர்களுடன் இருக்கும் சமயத்தில் மைனா பட வில்லி பாணியில் “எப்போ வருவீங்க” என கேட்கமாட்டேன்’ என கையெழுத்து போட்டுள்ளார்.
வெளிநாட்டில் தமிழாசிரியராக பணிபுரிய ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியமா என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட பணி அறிவிப்பில், தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டம் போன்ற தகுதிகளுடன் ஹிந்தி, சமஸ்கிருதம் அறிந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் அதிர்ந்த கல்வியாளர்கள், தமிழ் ஆசிரியர்களுக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும் என வினவியுள்ளனர்.
உலகின் வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை இன்று உயிரிழந்துள்ளது. பூனைகளின் சராசரி ஆயுள் காலம் 15 ஆண்டுகள் என கூறப்படும் நிலையில், ரோஸி 2 மடங்கு அதிகமாக நலமுடன் வாழ்ந்துள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தின்படி (2022) ஃப்ளோசி என்ற 27 வயதான பூனையே உலகின் வயதான பூனையாக இருந்தது. ரோஸியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா? என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பி உள்ளார். செந்துறை அருகே மணல் கடத்தல் கும்பலால் போலீஸ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மீது அச்சம் இல்லை. அவர்களைக் கண்டு அதிகாரிகள் அஞ்ச வேண்டியுள்ளது. அந்தளவுக்கு கடத்தல் கும்பல்களுக்கு செல்வாக்கு உள்ளது என கூறியுள்ளார்.
மிலாடி நபி திருநாளையொட்டி, நாளை (17/09/24) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று 10 மணி முதல் நாளை மறுநாள் பகல் 12 மணி வரை அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் H.ராஜாவை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் குறித்து இழிவாகவும், ராகுலை தேசத்துரோகி எனக் கூறியதை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவுக்கு சென்று இந்தியாவை குறை கூறியதாக ராகுலை பாஜக விமர்சித்தது.
இன்னுயிரை கொடுத்தேனும் சமூக நீதியை மீட்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், நாளை செப்டம்பர் 17-ஆம் நாள், DMK அரசின் சமூக அநீதிக்கு நாளையுடன் வயது 900 நாட்கள் என கூறியுள்ளார். வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று SC ஆணையிட்டு, 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாக திகழும் ஸ்டாலின் அரசு செயல்படுத்த மறுப்பதாக சாடியுள்ளார்.
டெல்லி CM அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மாலை துணைநிலை ஆளுநரை சந்திக்க உள்ளதாக AAP அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற AAP கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டதாகவும், அதில் அடுத்த CM குறித்து ஆலோசித்ததாகவும், நாளை மீண்டும் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பின் துணைநிலை ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.