India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கவுதம் கம்பீர் தலைமையிலான புதிய கோச்கள், தனி பாணியை பின்பற்றுவதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். டிராவிட் வழங்கிய பயிற்சியை ஒப்பிடும் போது இது வித்தியாசமானது எனக் குறிப்பிட்ட அவர், அதனால் எந்த பிரச்னையும் இல்லை எனக் கூறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு, Head Coach கம்பீர் தலைமையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? கமெண்டல சொல்லுங்க.
இன்று புரட்டாசி தொடங்கியுள்ள நிலையில், இம்மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்ற கூற்று உள்ளது. இந்த மாதத்தில்தான் வெயில் குறைந்து மழை ஆரம்பமாகும். ஏற்கெனவே சூடாக இருக்கும் பூமி, மழை நீரை உள்வாங்கி வெப்பத்தை வெளியிடும். இது வழக்கமான வெப்பத்தைவிட அதிக உஷ்ணமாக இருக்கும். இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல் மேலும் சூடாகும் என்பதாலேயே அசைவத்தை தவிர்க்க வேண்டும் என சான்றோர்கள் கூறுகின்றனர்.
CM பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்வது இது முதல்முறை அல்ல. 2வது முறை. 2013 டிச.28 ல் முதல் முறை CM ஆன அவர், 48 நாளில் 2014 பிப் 14ல் ராஜினாமா செய்தார். பிறகு 2015, 2020 தேர்தலில் வென்று 9 ஆண்டுகளாக பதவியில் இருந்தார். பாஜக, காங்., மீதான அதிருப்தியால் AAP மிகப்பெரும் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை, மதுபான கொள்கை வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளதால் 2015 வெற்றி, மீண்டும் சாத்தியமா என கேள்வி எழுந்துள்ளது.
BAN அணியின் ஷகிப் அல் ஹசன் போல மெஹதி ஹாசனும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கலாம் என முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், BAN அணிக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கவனத்துடன் விளையாட வேண்டும். நவம்பரில் தொடங்கும் ஆஸி., டெஸ்ட் தொடருக்கு இது ஒரு நல்ல பயிற்சி ஆட்டமாக இருக்கும் என்றார். BAN-IND டெஸ்ட் தொடர் 19ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
திமுக முப்பெரும் விழாவில் CM ஸ்டாலின் அருகில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏற்பாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்ணா (செப்.15), பெரியார் (செப்.17) பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட (செப்.17) நாள் ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.
கேரளாவில் நிஃபா வைரஸால் ஒருவர் உயிரிழந்ததன் எதிரொலியாக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, குமரி மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும். தீவிர கண்காணிப்புக்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
டெல்லி CMஆக அதிஷி தேர்வான நிலையில், டெல்லியை கடவுள் தான் காக்க வேண்டும் என ஆம் ஆத்மி MP சுவாதி மாலிவால் கூறியுள்ளார். பயங்கரவாதி அப்சல் குருவை, மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அதிஷி குடும்பம் போராடியதாக குற்றஞ்சாட்டிய அவர், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் தற்போது டெல்லியின் டம்மி CM ஆகியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். கெஜ்ரிவால் PA தன்னை தாக்கியதாக சமீபத்தில் இவர் புகாரளித்திருந்தார்.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் வாட்டி எடுக்கிறது. இரவில் கடும் புழுக்கம் காணப்படுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழை பெய்ததை பார்த்து அனைவரும் கடும் மழை இருக்கும் என எண்ணிய நிலையில், அதற்கு நேர்மாறாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதை பார்க்கும் பலரும் இது செப்டம்பரா? ஏப்ரல், மேயா? என கேள்வி எழுப்புகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க? கீழே கமெண்ட் பண்ணுங்க
டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, APP சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார். வரும் சட்டமன்ற தேர்தல் வரை அதிஷி முதல்வராக இருப்பார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வராக பதவியேற்கும் மூன்றாவது பெண் அதிஷி ஆவார்.
ஹங்கேரியில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை 6 சுற்றுகள் முடிந்த நிலையில் ஒன்றில் கூட IND அணி தோற்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பிரக்யானந்தா, குகேஷ் உள்பட IND அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மொத்தம் 11 சுற்றுகளாக போட்டி நடைபெற உள்ளது. இந்திய ஆடவர், மகளிர் அணிகள் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.
Sorry, no posts matched your criteria.