India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான குறைந்த விலை டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் 5 நாள்கள் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள், தினசரி காலை 7 மணிக்கு மைதான கவுன்டரில் விற்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ₹200 மட்டுமின்றி ₹400, ₹1000 கட்டண டிக்கெட்களையும் பெறலாம். ஆன்லைனில் ₹1,000 முதல் 15,000 வரை தனியாக டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆராய்ந்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இதற்கு ஆதரவாக அறிக்கை அளித்திருந்தது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். இது, சட்ட வடிவம் பெறும் போது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் கடந்த வாரம் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வழக்கமாக ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக இயக்குவதால், ஊரகப் பகுதி மக்கள் பாதிப்படைந்தனர். இந்நிலையில், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அதற்கு ஓட்டுநர், நடத்துநரை அரசே நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெரியார் பிறந்தநாளையொட்டி நேற்று பெரியார் திடலுக்கு சென்ற தவெக தலைவர் விஜய், அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதன் மூலம் திராவிட அரசியலை விஜய் கையில் எடுத்துள்ளதாக விவாதங்கள் அனல் பறந்து வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த உதயநிதி, “யாராக இருந்தாலும் பெரியாரை மீறியோ, பெரியாரை தொடாமலோ அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய்க்கு வாழ்த்துகள்” எனக் கூறினார்.
இதிகாச காலத்தில் தொடங்கி நவீன காலம் வரையிலான நாடகங்களில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது என்பதை ‘அரங்க வெளியில் பெண்கள்’ நூலில் இளம்பிறை விரிவாக ஆய்வு செய்துள்ளார். நாடகங்களில் பெண்களின் பாத்திரப் படைப்பு, பங்கு போன்றவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. சமத்துவத்திற்கான பெண் நிகழ்த்துக் கலைஞர்களின் போராட்டங்களும் நாடகவியலாளர்கள் மங்கை, கலைராணி போன்றோரது கருத்துகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.
இன்று 10 மணிக்கு <<14129819>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ரிப்பன் பிரபு 2) CO₂ 3) Uninterrupted Power Supply 4) முதலாம் குலோத்துங்கன் 5) சர் ஜென்லிலி 6) தட்டை அணுக்கள் 7) பெலிஸ் கேட்டஸ். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
விஜய்யின் அரசியல் வருகையால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சீமான் கூறியுள்ளார். எந்த ஒரு கட்சியாலும் தங்களின் அரசியல் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும், நாம் தமிழர் கட்சியால் தான் அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2026 தேர்தலில் NTK தனித்து போட்டியிடுவதாகவும் ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வெற்றியை பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெரியாரை தவிர்த்துவிட்டு யாராலும் அரசியல் செய்ய முடியாது என இயக்குநர் கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார். அதனால் தான் நடிகர் விஜய் பூ தட்டை தூக்கிக்கொண்டு பெரியார் திடலுக்கு சென்றதாகவும், பெரியாரையும், அண்ணாவையும் பின் தொடர்பவர்களைத்தான் தமிழக மக்களுக்கு பிடிக்கும் எனவும் குறிப்பிட்டார். யாருடைய சுய மரியாதை சீண்டப்பட்டாலும், தமிழக மக்கள் அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றார்.
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 2வி என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 14.79 Bhp பவர், 14 NM டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் இதில் 163.2 cc திறன் சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. டிஸ்க் & டிரம் பிரேக், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், டிஜிட்டல் டிஸ்பிளே, டிராக் ரேஸ் டைமர், 17 அங்குல அலாய் சக்கரங்கள் கொண்ட இதன் ஷோரூம் விலை ₹1.11 லட்சமாகும்.
Sorry, no posts matched your criteria.