News October 8, 2024

OLA-வை சுத்து போட்ட CCPA..!

image

நுகர்வோர் பாதுகாப்பு விதியை மீறியதாக OLA நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்வீஸ், பேட்டரி பிரச்னைகள், அடிக்கடி பழுதாவது என கடந்த ஓராண்டில் 10,644 புகார்கள் குவிந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து வருவதாகவும், OLA நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் CCPA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 8, 2024

விருது பெற்றார் ஸ்டாலின்

image

முதல்வர் ஸ்டாலினுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கபட்டுள்ளது. சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழலமைப்பை வலுப்படுத்துவதில் உள்ள தலைமைத்துவ உறுதியையும், விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்த விருதை வழங்கி ஆசிய HRD விருது குழு கெளரவித்துள்ளது. இதற்கு ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார்.

News October 8, 2024

இஸ்ரோவின் அடுத்த டார்கெட்..!

image

வெள்ளி கோள் குறித்து ஆய்வு நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. கோளின் நிலப்பரப்பு குறித்த வரைபடம் தயாரிக்கவும், எரிமலைகளை கண்டறிந்து ஆய்வு நடத்தவும் 19 கருவிகளுடன் கூடிய விண்கலம் ஒன்றை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. இந்த 19 கருவிகளில் , 3 கருவிகள் சுவீடன், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து உருவாக்கப்பட உள்ளது. கோளின் வளிமண்டல இயக்கவியல், காலநிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.

News October 8, 2024

இன்று கனமழை வெளுத்து வாங்கும்

image

அரபிக்கடலில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, நீலகிரி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, கோவை, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், அக்.10 – 12 வரை தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

News October 8, 2024

அமேசானில் பாடப்புத்தகங்கள் விற்பனை

image

அனைத்து வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை அமேசான் நிறுவனம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் NCERT மற்றும் அமேசான் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் அமேசான் NCERT ஸ்டோர்களில் சில்லறை விலையில் புத்தகங்கள் கிடைக்கும் எனவும் அச்சிடப்பட்ட விலைக்கே புத்தகங்கள் விற்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 8, 2024

பிரதமரை சந்திக்கும் உதயநிதி

image

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியை, துணை முதல்வர் உதயநிதி விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் தாமதமானதால் பிரதமரை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து, ரூ.7,425 கோடியை மத்திய அரசின் பங்களிப்பாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் சந்திக்க உள்ளார்.

News October 8, 2024

Health Tips: இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

image

கார்டியாக் அரெஸ்ட், மாரடைப்பு இரண்டும் வெவ்வேறானதென பலருக்கு தெரியாது. ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு ரத்தம் செல்வது தடைப்படுவதை, மாரடைப்பு என்கின்றனர். கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயத்துடிப்பு முடக்கத்தைக் குறிக்கும். மாரடைப்பு அறிகுறிகளில் தோள்பட்டை, மார்பு வலி, மூச்சுத் திணறல், பதட்டம், குமட்டல் ஆகியவை அடங்கும். கா.அரெஸ்ட் எவ்வித அறிகுறி இல்லாமல் தூக்கத்திலும் கூட வரலாம்.

News October 8, 2024

அக்.8: வரலாற்றில் இன்று

image

1932 – இந்திய விமானப்படை தொடங்கப்பட்டது.
1991 – குரோஷியா, சுலோவீனியா மக்கள் யுகோஸ்லாவியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2001 – இத்தாலியின் மிலன் நகரில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 118 பேர் இறந்தனர்.
2005 – காஷ்மிரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்தனர்.

News October 8, 2024

மூலிகை: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் அதிமதுரம்

image

‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் அதிமதுரத்தின் ஆற்றலைப் போற்றுகிறது. கிளைசிர்ரைசின், கிளைசிரெடிக் அமிலம், ஐசோலிகுரிடின், ஐசோஃப்ளேவோன்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் வேறில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தை தலையில் தடவி வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News October 8, 2024

ஜம்மு-காஷ்மீரை வெல்லப்போவது யார்?

image

ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக நடைபெற்ற 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-வது பிரிவை, மத்திய அரசு ரத்து செய்த பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் போலீசாருடன், ராணுவமும் இணைந்து பல அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெல்லப்போவது யார் பாஜகவா, காங்கிரஸா?

error: Content is protected !!