India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு MAM மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ஊழல், பிரிவினைவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீரையே மக்கள் விரும்புவதாக கூறினார். 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளில் அக்.1ல் நடைபெறுகிறது. ஜம்முவில் 24 தொகுதிகள், காஷ்மீரில் 16 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
‘தேவரா – 1’ திரைப்படம் உலகம் முழுவதும் ₹172 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான இப்படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்றும், கோவை, நீலகிரி, தேனி, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளையும், நீலகிரி, விருதுநகர், நெல்லை, குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
நாளை முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை வானில் 2 நிலவுகள் தோன்றும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ‘மினி நிலவு’ என அழைக்கப்படும் ‘2024 PT5’ என்ற சிறிய விண்கல் பூமிக்கு சுமார் 14 லட்சம் கி.மீ. தொலைவில் வரவுள்ளது. இதனை தொலைநோக்கி மூலம் மட்டுமே காண முடியும். இதன் மீது சூரிய ஒளிப்படும்போது, நிலவைப் போல காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிலவைப் போல சுற்றிவரவுள்ளது.
ஐ.நா சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய அவர், “ஐ.நாவின் அனைத்து அமைப்புகளும் சீர்திருத்தப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பாதுகாப்பு அவை முடக்கப்படக்கூடாது. பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் முக மலர்ச்சியுடன் உற்சாகமாக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுறுசுறுப்பு, அறிவுக்கூர்மை, கலா ரசனை, நகைச்சுவை உணர்வு, கற்பதில் ஆர்வம், கொள்கையை விட்டுக் கொடுக்காத மனநிலை கொண்ட நீங்கள், அனைத்துத் தரப்பினரிடமும் எந்தப் பேதமும் இல்லாமல் பழகுவீர்கள் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில், அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் உறுதி செய்துள்ளது. அத்துடன், நஸ்ரல்லாவின் மகள் ஜைனப் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நஸ்ரல்லா நிலை குறித்து இதுவரை ஹிஸ்புல்லா அமைப்பு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றி குறித்து பேசிய அவர், “ஒரு நல்ல வெற்றிப் படத்துக்காக ரொம்ப நாட்கள் காத்து இருந்தேன். அது இப்போது நடந்து இருக்கிறது. படத்தை ரசிகர்கள் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றியை இதயத்தில் வைத்து இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
திமுகவுடன் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும் என்ற தேவை விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமா தெரிவித்துள்ளார். கருணாநிதியைவிட கொள்கை பகைவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தும், ஆபத்தான பேராளுமை மிக்க தலைவராக ஸ்டாலின் இருப்பதுவே திமுக கூட்டணியில் விசிக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம் எனத் தெளிவுப்படுத்தி உள்ளார்.
இன்று 10 மணிக்கு <<14214859>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) நைல் நதி 2) Bharat Sanchar Nigam Limited 3) ஜென்ஞ்சி மோனோகடாரி (Tale of Genji) & முராசாகி ஷிகிபு 4) நர்த்தகி நடராஜ் 5) CH₄ 6) நுரையீரல் தமனி 7) 90. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.