India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அனுமதியின்றி தியேட்டருக்குள் நுழையக் கூடாது என யூடியூபர்களுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தியேட்டர் வாயிலில் ரசிகர்களிடம் யூடியூபர்கள் கருத்து கேட்கக் கூடாது என்றார். மீறி கருத்து கேட்கும்பட்சத்தில் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் சோலார் மின் ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கவுதம் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. குற்றப்பத்திரிகையில், ஆந்திர மாநில மின் விநியோக நிறுவன (DISCOMs)அதிகாரிகளுக்கு மே 2019 முதல் ஜூன் 2024 வரை சுமார் 1,750 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேங்காய் தண்ணீர் உடலுக்கு நன்மையை கொடுத்தாலும், அதனை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் தேவை என பிரபல டயட்டீஷியன் அல்கா கார்னிக் கூறுகிறார். அவரின் சில அறிவுறுத்தல்கள் வருமாறு, * வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். இல்லையெனில், வயிற்று எரிச்சல், குமட்டல் ஏற்படலாம் * ஆரஞ்சு சாறு கலந்து குடிக்கலாம் * தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.
மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலத்தை இரண்டு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக தமிழக அரசு குறைத்துள்ளது. MD, MS உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாகக் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதால் இந்தியாவில் அதானி நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவைக் கண்டுள்ளன. இன்று ஒரே நாளில், அதானி நிறுவனங்கள் சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்பினை இழந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு லட்சத்து, 85 ஆயிரம் கோடிகள் ஆகும். நீங்க அதானி பங்குகள் வைத்திருக்கிறீர்களா?
கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு கிராமத்துலயே ஒன்னு, இல்ல ரெண்டு டிவிதான் இருக்கும். நாம பக்கத்து வீட்டுல போய் உக்காந்து டிவி பார்த்திருப்போம். அப்ப எல்லாம் பிளாக் & வொய்ட் டிவி பார்க்குறது கூட சூப்பரா இருக்கும். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் டிவி நுழைய ஆரம்பிச்சுது. இப்போ, டிவி இல்லாத வீடே இல்ல. உங்க வீட்டுக்கு டிவி எப்போ வந்துச்சினு சொல்லுங்க. இன்று சர்வதேச டிவி தினம்.
அதானிக்கு அமெரிக்க கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது ஏன் தெரியுமா? ₹ 16,000 கோடி சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெறுவதற்காக ₹ 2,000 கோடியை இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி தரப்பு வழங்கியதுதான் குற்றச்சாட்டு. ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நிறுவனங்கள்தான் முதலீடு செய்கின்றன. எனவே, அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த வழக்கு நியூயார்க் கோர்ட்டில் பதிவானது.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் குடும்பத்தைச் சேர்ந்த சுஷாந்த் அனுமோலுவை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் வெளியான தகவலுக்கு நடிகை மீனாட்சி சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அவர், இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என புரியவில்லை, நான் யாரையும் காதலிக்கவில்லை அப்படி இருந்தால் நானே அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.
போலி ரேஷன் அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, உண்மையான ரேஷன் அட்டைதாரர்களுக்கு போதிய அளவு உணவுப்பொருட்கள் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், பொது விநியோகம் அண்மையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், நாடு முழுவதும் 5.80 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டன. எனவே, இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சீராக உணவுப்பொருட்கள் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி(DD), “Waves” என்ற புதிய OTT தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. IFFI திரைப்பட விழாவில், கோவா முதல்வர் இதனை துவங்கி வைத்தார். Waves 65 சேனல்களை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மொழிகளில் வழங்குகிறது. Infotainment, கேமிங், கல்வி, ONDC உடன் இணைந்து ஆன்லைன் ஷாப்பிங் போன்ற சேவைகளையும் வழங்குகிறது. இந்த OTT தளம் Android – iOS இல் கிடைக்கிறது.
Sorry, no posts matched your criteria.