News March 11, 2025

தனியார் பள்ளிகளில் மும்மொழி இல்லையா? தமிழிசை கேள்வி

image

அரசுப் பள்ளி குழந்தைகளை வஞ்சித்து, தமிழக அரசு அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். தனியார் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? என CM ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தனியார் பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படவில்லை என்று கூற முடியுமா? எனவும் அவர் வினவினார்.

Similar News

News March 11, 2025

நீரழிவு நோய்க்கான மாத்திரை விலை 90% குறைகிறது

image

நீரழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மாத்திரையின் விலை 90% குறைக்கிறது. அதாவது ₹60க்கு விற்கப்படும் ஒரு மாத்திரையின் விலை வெறும் ₹6ஆக குறைகிறது. கோடிக்கணக்கான மக்களின் செலவை குறைத்து நிதி அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் என்பதுடன் நீரிழிவு நோய் பாதித்த அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்த ஏதுவாக அமையும்.

News March 11, 2025

இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டும்

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யும் என IMD முன்னறிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும். இதனால், பள்ளி, கல்லூரி செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லவும்.

News March 11, 2025

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்கிறீர்களா? உஷார்!

image

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதற்கேற்ப, சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த வகையில், நடப்பு நிதியாண்டின் 9 மாதங்களில் சைபர் குற்றங்களால் ₹40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 13,384 சைபர் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் இதனால், ₹733 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

error: Content is protected !!