News August 19, 2025

முதல் ரூபாய் நோட்டை பாத்திருக்கீங்களா?

image

இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1935-ல் பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது. அதனை தொடர்ந்து, தனது முதல் ரூபாய் நோட்டாக ரிசர்வ் வங்கி 1938-ல் ₹5 மதிப்பிலான நோட்டை அச்சடித்து வெளியிடப்பட்டது. இந்த நோட்டில் அப்போதைய இங்கிலாந்து அரசர் கிங் ஜார்ஜ் VI இடம்பெற்றிருந்தார். அதே வருடத்தில் ₹10, ₹100, ₹1,000, ₹10,000 நோட்டுகளும் அச்சடித்து வெளியிடப்பட்டன. நீங்க பார்த்த பழைய ரூபாய் நோட்டு எது?

Similar News

News August 19, 2025

CP ராதாகிருஷ்ணன் Vs சுதர்சன் ரெட்டி.. யாருக்கு வெற்றி?

image

துணை ஜனாதிபதி ரேஸில் தென்னிந்தியர்கள் இருவர் மோதுகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி NDA-வின் CP ராதாகிருஷ்ணனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும். லோக்சபா, ராஜ்யசபா 2 அவைகளிலும் 782 பேர் உள்ளனர். இதில், 6 இடங்கள் காலியாக உள்ளன. LS-ல் NDA-வுக்கு 293, INDIA-வுக்கு 249 MP-க்கள் உள்ளனர். RS-ல் NDA-வுக்கு 130 MP-க்கள் உள்ளனர். இதனால் வெற்றிக்கு தேவையான 392-ஐ விட NDA அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. SHARE IT.

News August 19, 2025

வார விடுமுறை.. ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

image

வார விடுமுறையையொட்டி ஆக. 22, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும், கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளன. பிற நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.

News August 19, 2025

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கேமிங் மசோதா அறிமுகம்

image

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மக்களவையில் கேமிங் மசோதா நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான மோசடிகள் தொடர்ந்து அரங்கேறும் நிலையில் அதை தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிட்டு PM மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் கேமிங் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபலங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்த கூடாது. இதற்கு ஏற்கனவே 28% ஜிஎஸ்டி வரி உள்ளது.

error: Content is protected !!