News August 19, 2025
முதல் ரூபாய் நோட்டை பாத்திருக்கீங்களா?

இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1935-ல் பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது. அதனை தொடர்ந்து, தனது முதல் ரூபாய் நோட்டாக ரிசர்வ் வங்கி 1938-ல் ₹5 மதிப்பிலான நோட்டை அச்சடித்து வெளியிடப்பட்டது. இந்த நோட்டில் அப்போதைய இங்கிலாந்து அரசர் கிங் ஜார்ஜ் VI இடம்பெற்றிருந்தார். அதே வருடத்தில் ₹10, ₹100, ₹1,000, ₹10,000 நோட்டுகளும் அச்சடித்து வெளியிடப்பட்டன. நீங்க பார்த்த பழைய ரூபாய் நோட்டு எது?
Similar News
News December 13, 2025
காந்தி பொன்மொழிகள்

*கூட்டத்தில் நிற்பது எளிதானது, ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும். *பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். *நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள். *எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை. *மனிதகுலத்தின் மகத்துவம் மனிதனாக இருப்பதில் இல்லை, மனிதாபிமானமாக இருப்பதில் உள்ளது.
News December 13, 2025
தீண்டாமையை ஒழிக்க போராடிய சாவர்க்கர்: அமித்ஷா

நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்து மதத்தில் இருந்த தீமைகளை அகற்ற அவர் போராடியதாகவும், இந்தியாவின் விடுதலை மற்றும் எதிர்காலத்தை அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்ததாகவும் அமித்ஷா கூறியுள்ளார். மேலும், அந்தமானில் சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறை, தேசிய புனித தளமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
EPSTEIN FILES: டிரம்ப், பில்கேட்ஸ் புகைப்படங்கள் வெளியீடு

பாலியல் குற்றவாளி <<12420595>>ஜெஃப்ரி எப்ஸ்டீனின்<<>> எஸ்டேட்டில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்களை அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ளது. அதில் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பில் கேட்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், இந்த போட்டோக்கள் எந்தவித சட்ட விரோத செயல்பாடுகளையும் குறிக்கவில்லை எனவும் ஜனநாயக கட்சி விளக்கம் அளித்துள்ளது.


