News October 12, 2025
அதிமுகவில் போர்க்கொடி தூக்கும் மாஜிக்கள்?

செங்கோட்டையன் போட்ட வெடி நமத்து போய்விட்டது என இப்போதுதான் பெருமூச்சுவிட்டார் EPS. அதற்குள், மாவட்டங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் மாஜிக்கள் அவரை குடைய ஆரம்பித்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், தாங்கள் கைகாட்டும் நபர்களுக்கே சீட் வழங்கணும் என அவர்கள் கூறுகிறார்களாம். ஆனால், அது தன்னுடைய முடிவு என்பதில் EPS தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News March 31, 2026
மகளிர் உதவித்தொகை ₹3,000.. பாஜக தேர்தல் வாக்குறுதி

‘அருணோதய்’ திட்டத்தில் மகளிருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ₹3,000 ஆக உயர்த்தப்படும் என அசாமில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. அம்மாநிலத்தில் தற்போது இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ₹1,250 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், லவ் ஜிஹாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை, பழங்குடியின பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் உள்ளிட்ட 31 வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
News March 31, 2026
அண்ணாமலை புறக்கணிப்பா? நயினார் விளக்கம்

கோவையில் PM மோடி வரவேற்பு நிகழ்ச்சிக்கான பட்டியலில் அண்ணாமலை <<19514484>>பெயரை சேர்க்காமல்<<>> பாஜக புறக்கணித்துள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை ஊரில் இல்லாததால்தான் வரவேற்பாளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என நயினார் விளக்கமளித்துள்ளார். மேலும், PM வரவேற்பு தொடர்பாக அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
தொடர்கதையாகும் கூட்ட நெரிசல் மரணங்கள்!

<<19522596>>பிஹாரில் <<>>இன்று கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ள உயிரிழந்த சம்பவம், இந்தியாவில் நெரிசல் மரண துயரத்துக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்துகிறது. கடந்த ஆண்டில் RCB, கரூர் கூட்ட நெரிசல் என பல உயிர்கள் இங்கு மரணித்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இப்பிரச்னைக்கு சரியான தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை. ஏன் இந்த கூட்ட நெரிசல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கிறது என நினைக்கிறீங்க?


