News April 16, 2025
ஏப்ரல் 19 ஆசிரியர்களுக்கு விடுமுறை

+1, +2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி புனித வெள்ளியும் ஏப்ரல் 20ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது. இடையில் 19ஆம் தேதி மட்டும் விடைத்தாள் திருத்தும் பணி இருப்பதால், அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை ஏற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
அலர்ட்.. 18 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 1 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், செங்கை, சென்னை, காஞ்சி, குமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உஷாரா இருங்க நண்பர்களே!
News December 5, 2025
இதனால்தான் IPL-ல் ஓய்வு பெற்றேன்.. ரஸல்!

IPL தொடரில் இருந்து விடைபெற்றதற்கான காரணத்தை <<18429842>>ஆண்ட்ரே ரஸல்<<>> தெரிவித்துள்ளார். வெறும் Impact பிளேயராக தொடர தனக்கு விருப்பமில்லை என கூறிய அவர், விளையாடும் போது பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் தாக்கத்தை உண்டாக்க விரும்பியதாக கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய தொடரான IPL-ல் விளையாட கடுமையான ஜிம் பயிற்சி தேவைப்படுவதாகவும், அதனை சமாளிப்பது மிகவும் சவாலான விஷயம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
News December 5, 2025
உங்களுக்கு வரும் SMS-ல் P, S, T, G என்று உள்ளதா?

உடனே உங்க போனை எடுத்து செக் பண்ணுங்க. வந்துள்ள அனைத்து மெசேஜ்களிலும் P, S, T, G ஆகிய எழுத்துகளில் ஏதாவது ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும் ★P (Promotional)- விளம்பரச் மெசேஜ் ★S (Service)- சேவை தொடர்பான மெசேஜ் ★T (Transactional)- பரிவர்த்தனை தொடர்பான மெசேஜ் ★G (Government)- அரசு சார்ந்த மெசேஜ். பொதுமக்கள் தங்களுக்கு வரும் மெசேஜ்கள் உண்மையானதா அல்லது மோசடியானதா என்பதை அறிய இது உதவும்.


