News April 8, 2025
நுகர்வோர் புகார்களை தெரிவிக்க விரைவில் செயலி

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க செயலி வெளியிடப்படும் என்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு ஏற்படும் சேவை குறைபாடுகள் குறித்து சம்பவ இடத்தில் இருந்து புகார் அளிக்க ₹20 லட்சத்தில் வலைதளம், செயலி உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளது. இதற்கான செலவினம் நுகர்வோர் நலநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
இரவு 10 மணிக்கு மேல் கரண்ட் கட்… ஏன் தெரியுமா?

ரஷ்யாவில் நாளுக்கு நாள் மக்கள்தொகை குறைந்து வருவதால், அதை தடுக்க வித்தியாசமான யோசனைகள் முன்வைத்துள்ளது அதன் ‘பாலியல் அமைச்சகம்’. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை வீடுகளுக்கான மின்சாரத்தையும், இன்டர்நெட் இணைப்பையும் கட் செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால், தம்பதியினர் உறவில் ஈடுபட வாய்ப்பு அதிகரிக்கும், குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி இருக்கு?
News July 5, 2025
மதம் கடந்த மனிதநேயம்

வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது தனித்துவமான பண்பாகும் அதனை உணர்த்தும் வகையிலான சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கோவில் பூசாரி ஒருவரின் 5 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக 60 லட்சம் பணம் தேவைப்பட்டது. இதனால் பயாஸ் என்பவரின் உதவியை நாடினார் பூசாரி. சிறுமி நிலை பற்றி இணையத்தில் வீடியோ வெளியிட்ட பயாஸ், 16 1/2 மணி நேரத்துக்குள் 75 லட்சம் வசூலித்து பூசாரியிடம் வழங்கியுள்ளார்.
News July 5, 2025
காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

மதுரை மேலூர் அருகே இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர் தீபன் ராஜ் தனது காதலியான 19 வயது பெண்ணை தனிமையில் அழைத்துவிட்டு நெருக்கமாக இருந்துள்ளார். இதனையடுத்து, தீபன் ராஜின் உதவியுடன் அவரது நண்பர்களான மதன், திருமாறன் ஆகியோர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.