News April 8, 2025

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க விரைவில் செயலி

image

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க செயலி வெளியிடப்படும் என்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு ஏற்படும் சேவை குறைபாடுகள் குறித்து சம்பவ இடத்தில் இருந்து புகார் அளிக்க ₹20 லட்சத்தில் வலைதளம், செயலி உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளது. இதற்கான செலவினம் நுகர்வோர் நலநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News December 17, 2025

பக்கா பிளான்.. திமுகவின் அடுத்த டார்கெட்

image

கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்துவதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், டிச.29-ல் திருப்பூர் பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். கடந்த வாரம் வட தமிழகத்தை குறிவைத்து இளைஞர் அணி மாநாட்டை திமுக நடத்தியிருந்தது.

News December 17, 2025

கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் அரசு

image

பிஹாரில் மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தில் 1.40 கோடி மகளிரின் வங்கி கணக்குகளில் தலா ₹10,000 செலுத்தப்பட்டது. அப்போது, தர்பங்கா கிராமத்தில் சில ஆண்களின் கணக்கிலும் தவறுதலாக ₹10,000 செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதை திரும்ப பெற கிராமத்துக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளனர் உள்ளூர் மக்கள். அந்த பணத்தை தீபாவளிக்கே செலவழித்துவிட்டதால் தங்களால் எப்படி தரமுடியும் என்றுள்ளனர்.

News December 17, 2025

பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு அறிவிப்பு

image

2026, பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு களைகட்டவுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!