News April 8, 2025
நுகர்வோர் புகார்களை தெரிவிக்க விரைவில் செயலி

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க செயலி வெளியிடப்படும் என்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு ஏற்படும் சேவை குறைபாடுகள் குறித்து சம்பவ இடத்தில் இருந்து புகார் அளிக்க ₹20 லட்சத்தில் வலைதளம், செயலி உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளது. இதற்கான செலவினம் நுகர்வோர் நலநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News January 9, 2026
விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? குஷ்பு

90-களில் எப்படி ரஜினி மிகப்பெரிய நடிகராக இருந்தாரோ அதேபோல் இன்று விஜய் ஸ்டாராக உள்ளார் என குஷ்பு தெரிவித்துள்ளார். அதனால் அவரை காண மிகப்பெரிய கூட்டம் கூடுகிறது என்றும், ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக மாறும் என நிச்சயமாக சொல்லமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். ‘ஜனநாயகன்’ படத்திற்கு எதிராக பாஜக செயல்படுவதாக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டு, மக்களை ஏமாற்றும் வேலை எனவும் சாடியுள்ளார்.
News January 9, 2026
மம்தா பானர்ஜி மீது வழக்கு தொடுத்த ED

<<18797106>>IPAC நிறுவன சோதனையின்<<>> போது முக்கியமான ஆதாரங்களை மம்தா எடுத்து சென்றதாக கொல்கத்தா கோர்ட்டில் ED வழக்கு தொடர்ந்துள்ளது. மம்தா ஏராளமான போலீஸ் அதிகாரிகளுடன் வந்த பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்ற வழக்கிற்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து சென்றதாக ED குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே வீட்டில் இருந்து பல ஆவணங்களை அனுமதியின்றி ED எடுத்துச் சென்றதாக I-PAC தலைவர் பிரதீக் குடும்பத்தினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
News January 9, 2026
பொடுகு பிரச்னையில் இருந்து மொத்தமாக விடுபட..

ஆரோக்கியமான கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பொடுகு பிரச்னைக்கு ஆப்பிள் சைடர் வினிகர் தீர்வளிக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு நீர் சேர்த்துக்கொள்ளுங்கள். தலைக்கு குளித்த பின், இதனை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு முடியை குளிர்ந்த நீரில் அலசினால் பொடுகு, அதனால் ஏற்படும் முடி உதிர்வு குறையும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.


