News April 8, 2025

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க விரைவில் செயலி

image

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க செயலி வெளியிடப்படும் என்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு ஏற்படும் சேவை குறைபாடுகள் குறித்து சம்பவ இடத்தில் இருந்து புகார் அளிக்க ₹20 லட்சத்தில் வலைதளம், செயலி உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளது. இதற்கான செலவினம் நுகர்வோர் நலநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

’தமிழ்நாடு’ – நீக்கியது ஜெயலலிதா தான்: சிவசங்கர்

image

அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டதற்கு ஜெயலலிதா தான் காரணம் என அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார். பஸ்களில் தமிழ்நாடு இல்லாததை கண்டித்து சீமான் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அரியலூரில் பேசிய சிவசங்கர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று கருணாநிதி வைத்த பெயரை, நீளமாக இருக்கிறது என்று கூறி, அதில் தமிழ்நாடு நீக்கப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில் தான் எனத் தெரிவித்துள்ளார்.

News December 31, 2025

அழகின் சிகரம் மீனாட்சி சவுத்ரி

image

மீனாட்சி சவுத்ரி, இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோஸை பகிர்ந்துள்ளார். சேலையில் உள்ள போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் பார்த்தாலே ஏதோ ஒரு ஸ்பார்க் ஆகிறது நெஞ்சுக்குள். கவனத்தை ஈர்க்கும் தோற்றம், இனிமையான சிரிப்பு, வானவில் போன்று வியக்கும் அழகு என அனைத்து உவமைகளும் சொந்தம் கொண்டாட துடிக்கும் ஓவியமாக இருக்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News December 31, 2025

சீனாவை முந்தியது இந்தியா!

image

சீன கார்களை விட இந்தியாவில் தயாரித்த கார்களே இந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் அதிகம் விற்பனையாகியுள்ளன. லைட்ஸ்டோன் வெளியிட்ட தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் அங்கு விற்கப்பட்ட மொத்த கார்களில் ஏறக்குறைய பாதி இந்தியாவில் தயாரானவை. நடப்பாண்டில் SA-ல் விற்கப்பட்ட வாகனங்களில் 49% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அதே வேளையில் சீனாவில் இருந்து 17.1% மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!