News April 8, 2025

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க விரைவில் செயலி

image

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க செயலி வெளியிடப்படும் என்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு ஏற்படும் சேவை குறைபாடுகள் குறித்து சம்பவ இடத்தில் இருந்து புகார் அளிக்க ₹20 லட்சத்தில் வலைதளம், செயலி உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளது. இதற்கான செலவினம் நுகர்வோர் நலநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்.. இவ்வளவு நல்லதா!

image

■காலை கற்றாழை ஜூஸில், சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து குடித்தால், எடை இழப்புக்கு உதவுமாம் ■கற்றாழை சாறுடன் நெல்லிக்காயும் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும் ■கற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழியுமாம் ■மேலும், வாய்ப்புண்ணை விரட்டவும் கற்றாழை ஜூஸ் உதவும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News December 15, 2025

இப்ப இல்லன்னா எப்பவுமே இல்ல: H.ராஜா

image

பிஹாரில் லாலு பிரசாத் குடும்ப ஆட்சி தூக்கி எறியப்பட்டது போல், TN-ல் கருணாநிதி குடும்பம் எறியப்பட வேண்டும் என H.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்றால், NDA எப்போதும் வெற்றி பெற முடியாது எனவும் கூறியுள்ளார். திமுக அமைச்சர்களை மக்கள் தெருவில் நிற்க வைத்து கேள்வி கேட்க தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 15, 2025

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

image

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க EPS நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், ஈரோடு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அமமுகவினர் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல், திமுக சாத்தூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் தனுஷ்கோடி, மதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் N.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்தனர்.

error: Content is protected !!