News April 8, 2025

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க விரைவில் செயலி

image

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க செயலி வெளியிடப்படும் என்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு ஏற்படும் சேவை குறைபாடுகள் குறித்து சம்பவ இடத்தில் இருந்து புகார் அளிக்க ₹20 லட்சத்தில் வலைதளம், செயலி உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளது. இதற்கான செலவினம் நுகர்வோர் நலநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News November 6, 2025

PM மோடியுடன் உலக சாம்பியன்கள் PHOTOS

image

ODI உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய மகளிர் அணி, இன்று PM மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. PM மோடியுடன் கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்திய வீராங்கனைகள், ‘Namo’ என்ற பெயர் பொறித்த இந்திய ஜெர்சியையும் வழங்கினர். மேலே Swipe செய்து அந்த புகைப்படங்களை பாருங்கள்.

News November 6, 2025

இரவில் கட்சி தாவினார்.. பிஹாரில் எதிர்பாராத திருப்பம்

image

பிஹாரில் நாளை காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முங்கெர் தொகுதியின் ஜன் சுராஜ் வேட்பாளர் சஞ்சய் சிங், பாஜகவுக்கு தாவியுள்ளார். நேற்று மாலை 5 மணி வரை பாஜகவுக்கு எதிராக வீடு வீடாக ஓட்டு கேட்டவர், திடீரென கட்சி மாறியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே NDA கூட்டணி, தனது வேட்பாளர்களை விலைக்கு வாங்க முயல்வதாக பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 6, 2025

இரவில் லேட்டா தூங்கினால் இவ்வளவு ஆபத்தா?

image

இரவில் அதிக அளவிலான செயற்கை வெளிச்சத்தில் (மின்சார விளக்குகள்) இருப்பது, இதய நோய் ஆபத்தை அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதிக நேரம் அதிக செயற்கை வெளிச்சத்தில் இருப்பது மூளையை அதிக அழுத்தத்துக்கு ஆளாக்குவதுடன், ரத்தக்குழாய்களை பாதித்து இதய நோய்க்கும் காரணமாகிறது. இரவில் வெளிச்சத்தில் அதிகநேரம் விழிப்பதால் 5 ஆண்டுகளில் 35%, 10 ஆண்டுகளில் 22% இதயநோய் வரும் ஆபத்து அதிகரிக்கிறதாம்.

error: Content is protected !!