News April 24, 2025

பஹல்காம் தாக்குதலில் மற்றொரு சோகக்கதை!

image

பஹல்காமில் மற்றொரு சோகக்கதையும் நிகழ்ந்துள்ளது. UAE-ல் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த நீரஜ் உத்வானியும் (33) இந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு 2 ஆண்டுகள் முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. மனைவியுடன் இந்தியா வந்தவர், காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளார். இவரின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட, தற்போது நீரஜ்ஜின் தாயார் மற்றும் மனைவி மீளா துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.

Similar News

News April 24, 2025

BREAKING: சட்டப்பேரவைக்கு செல்லாத செந்தில் பாலாஜி!

image

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்(SC) 4 நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவர் இன்று சட்டப்பேரவைக்கு செல்லவில்லை. பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பதவியா? ஜாமினா? எது வேண்டும் என்பது குறித்து 4 நாள்களில் முடிவெடுக்க SC கெடு விதித்திருந்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 24, 2025

பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்

image

பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ X பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தவறான தகவலைப் பரப்புவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

News April 24, 2025

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடக்கம்

image

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகளும் சரிந்தன. இதையடுத்து சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து 79,920-ஆக வர்த்தகமாகிறது. நிப்டி 24,284 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. பங்குச்சந்தைகள் கடந்த 7 நாள்களாக உயர்வுடன் காணப்பட்டன. இதனால் சென்செக்ஸ் நேற்று 80,000 புள்ளிகளை கடந்தது.

error: Content is protected !!