News April 2, 2025

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

image

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 22, 2025

குமரி: இதை செய்யலயா? PAN கார்டு செல்லாது!

image

பான்கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க

News November 22, 2025

தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

image

நடிப்பு பயிற்சியாளர் கோபாலி(92), <<18290175>>இயக்குநரும், நடிகருமான வி.சேகர்<<>>(73), <<18248121>>நடிகர் அபிநய்(48)<<>> என இம்மாதத்தில் அடுத்தடுத்து முக்கிய நபர்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது. இதில் கோபாலி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாசர் உள்ளிட்ட பலர் உச்சபட்ச நடிகர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த 18-ம் தேதி மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு இன்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

News November 22, 2025

தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட்; எதுலன்னு பாருங்க..

image

தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக வழிநடத்தும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால் தெ.ஆ., அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ளது. 2008 முதல் 2014 வரை சுமார் 60 டெஸ்ட் போட்டிகளை தோனி வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!