News April 2, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
வீட்டை சொர்க்கமாய் மாற்றும் செடிகள் இவைதான்

முன்பு வீட்டை சுற்றி மரம், செடி, கொடி என சூழ்ந்து இருந்ததால், இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தோம். இன்று அப்பர்ட்மென்டுகளில் சுத்தமான காற்று கூட கிடைக்காமல், Air purifier வைத்து வாழ்த்து கொண்டிருக்கிறோம். மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம் என்றாலும் வீட்டின் பால்கனியில் சில செடிகளை வைத்து வளர்த்தால் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும். அது என்ன செடிகள் என மேலே உள்ள SWIPE செய்து பாருங்கள்.
News October 22, 2025
நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *ஒரு சமூகத்தின் உண்மையான குணம் அது குழந்தைகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. *உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் முக்கியமானதாகும்.
News October 22, 2025
NATIONAL ROUNDUP: பிஹாரில் 1,314 வேட்பு மனுக்கள் ஏற்பு

▶சபரிமலை கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று சாமி தரிசனம் ▶பிஹார் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தலில் 1,314 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ▶பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணித்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தகவல் ▶கேரளாவில் வெளுத்து வாங்க தொடங்கிய கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.