News April 2, 2025

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

image

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 15, 2025

ஆஸ்கர் போட்டியில் பா.ரஞ்சித்தின் ஆவணப்படம்

image

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ், யாழி பிலிம்ப்ஸ் தயாரிப்பில் மறைந்த முற்போக்கு பாடகரும், எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு, ‘தலித் சுப்பையா-வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இயக்குநர் கிரிதரன் இதை இயக்கியிருந்தார். இந்நிலையில், இந்த ஆவணப்படம் ஆஸ்கருக்கான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளதாக நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

News November 15, 2025

BREAKING: முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு

image

நாமக்கல்லில் வரலாறு காணாத புதிய உச்சமாக முட்டையின் கொள்முதல் விலை ₹5.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் இதுதான் அதிகபட்ச விலையாகும். முட்டையின் நுகர்வு, விற்பனை அதிகரிப்பு காரணமாக விலை உயர்வதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சில்லறை கடைகளில் 1 முட்டையின் விலை ₹7 வரை விற்கப்பட வாய்ப்புள்ளது.

News November 15, 2025

Show-off ஆட்சியில் TN-க்கு எப்படி தொழில்கள் வரும்? EPS

image

TN-க்கு தொழில் தொடங்க வரவேண்டிய கொரியாவின் ஹ்வாசங் நிறுவனம், ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள EPS, 4 ஆண்டுகளாக பொம்மை முதல்வர் ஷோ காட்டியதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் ஊழல்கள் என சீர்குலைந்துள்ள இந்த ஆட்சியில் எப்படி தொழில் நிறுவனங்கள் TN-க்கு வரும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!