News April 2, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
பொங்கல் பரிசாக ₹5,000?… ரேஷன் கார்டுக்கு வழங்க திட்டம்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு தலா ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொக்கத் தொகையுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டவை வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறதாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பரிசுத் தொகை இல்லாமல், பொங்கல் பொருள்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
நவ.29-ல் திமுக MP-க்கள் கூட்டம்

திமுக MP-க்கள் கூட்டம் நவ.29-ம் தேதி நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து திமுக MP-க்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்திற்கான நிதி, மெட்ரோ ரயில் திட்டம், காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News November 27, 2025
உங்க SIR படிவம் அப்லோட் ஆகிடுச்சான்னு செக் பண்ண..

★<


