News April 2, 2025

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

image

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

டெல்டா, தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக நீடித்த மழை சற்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிச.14 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை(டிச.9) மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் செல்வோர் கவனமாக இருங்கள்!

News December 8, 2025

பிரபல நடிகர் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய மகள்

image

டிச.8.. இந்நாளில் பாலிவுட் ஹீ-மேன் தர்மேந்திராவின் மும்பை வீடு ஆரவாரத்தால் நிரம்பி இருக்கும். ஆனால், அண்மையில் அவர் மறைந்ததால் மொத்த காட்சியும் மாறிவிட்டது. தர்மேந்திராவின் பிறந்த நாளான இன்று, அவரது இல்லமும், குடும்பத்தினரின் உள்ளமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. ‘மிகுந்த வலியுடன் உங்களை மிஸ் பண்ணுகிறேன் அப்பா. உங்களை பத்திரமாக இதயத்தில் வைத்திருப்பேன்’ என மகள் ஈஷா உருக்கமுடன் SM-ல் பதிவிட்டுள்ளார்.

News December 8, 2025

கொரோனாவுக்கு பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளர்ச்சி

image

கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினருக்கும் இதய நாள தளர்ச்சி(Vascular Dysfunction) ஏற்படுவது TN அரசு டாக்டர்கள் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. இது, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் வழக்கத்தை காட்டிலும் ஒன்றரை மடங்கு வீங்கும் பாதிப்பாகும். 2020 – 2023 வரை 11,420 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இவை தெரியவந்துள்ளன. இதுவே இளம் வயதினருக்கும் மாரடைப்பு அதிகரிக்க காரணமாக அமைவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!