News April 2, 2025

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

image

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 26, 2025

ராஜினாமா செய்த கையோடு செங்கோட்டையன் சம்பவம்

image

MLA பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட் கொடுத்து வருகிறார். TVK-வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதவியை ராஜினாமா செய்த கையோடு, சபாநாயகர் அறையிலேயே சேகர் பாபு – செங்கோட்டையன் பேசி வருகின்றனர். ஒருவேளை திமுகவில் இணைந்தால் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்பதால், ஈரோடு முகமாக இருக்கும் அமைச்சர் முத்துசாமியை திமுக தலைமை சமாதானம் செய்கிறாதாம்.

News November 26, 2025

கே.ஏ.செங்கோட்டையன் கடந்து வந்த அரசியல் பாதை!

image

1972-ல் திமுகவிலிருந்து விலகிய செங்கோட்டையன், அதிமுகவில் இணைந்தார். 1975 கோவை பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி MGR-ன் குட் புக்கில் இடம்பெற்றார். 1977-ல் முதல்முறையாக சத்தியமங்கலம் MLA ஆனார். 1980 முதல் கோபியில் போட்டியிட்டு 8 முறை வெற்றி கண்டவர் இவர். 1989-ல் பிளவின்போது ஜெ., பக்கம் நின்றார். 1991-1996 வரை போக்குவரத்து அமைச்சர், 2011 – 2016-ல் விவசாயம், 2016-2021-ல் பள்ளிக்கல்வித்துறையை கவனித்தார்.

News November 26, 2025

இனி பெட்ரோல், டீசல் வேண்டாம்: அமைச்சர்

image

இந்தியாவில் காற்று மாசை குறைக்க பெட்ரோல், டீசலுக்கு பதிலாக பயோ எரிபொருள்களை உருவாக்கவேண்டும் என நிதின் கட்கரி கூறியுள்ளார். ஒரு நாட்டுக்கு பொருளாதாரமும், சுற்றுச்சூழலும் முக்கியம் என்ற அவர், இந்தியாவில் 40% காற்று மாசு வாகன புகையால் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார். எனவே, மாற்று எரிபொருளை உருவாக்கினால் பெட்ரோல் இறக்குமதி செலவுகளை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலையும் காக்கலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!