News April 2, 2025

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

image

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

ALERT: அவசர எண்களை மாத்தியாச்சு.. இத கவனியுங்க!

image

பொதுவாக, பிரசவ வலி முதல் சாலை விபத்து, மாரடைப்பு போன்ற எந்த மருத்துவ உதவிக்கு, 108 என்ற எண்ணில் ஆம்புலன்ஸ்க்கு அழைப்போம். ஆனால், அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன *102 – கர்ப்பிணி & பச்சிளம் குழந்தைகளின் உதவிகளுக்கு *1073 – சாலை விபத்துகளுக்கு *104- இலவச மருத்துவ உதவிகளுக்கு. மற்ற உதவிகளுக்கு ‘108’ என்ற எண்ணில் அழைக்கலாம். இந்த அத்தியாவசிய செய்தியை அனைவருக்கும் பகிரவும்.

News November 25, 2025

BLO-வை வீட்டில் அடையுங்கள்: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

image

SIR படிவங்களை எடுத்துவரும் BLO-க்களை வீட்டில் கட்டிவையுங்கள் என ஜார்க்கண்ட் காங்., அமைச்சர் இர்ஃபான் அன்சாரி பேசியுள்ளார். வாக்களர் பெயர்களை நீக்குவதற்காகவே அவர்கள் வீடுதேடி வருவதாக கூறிய அவர், SIR-க்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், அமைச்சரின் பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், BLO-க்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

News November 25, 2025

டிகிரி மட்டும் போதும்; வங்கியில் வேலை: APPLY NOW

image

பேங்க் ஆப் பரோடாவில் Apprentice பணிக்கு 153 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதி: ஏதாவது ஒரு டிகிரி. வயது வரம்பு: 20-28 வயது வரை. ஊதியம்: மாதம் ₹15,000 வரை Stipend. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 1. விண்ணப்பிக்கும் முறை: Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக மட்டுமே. வேலை தேடுவோருக்கு SHARE THIS.

error: Content is protected !!