News April 2, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

2 நாள்களாக கனமழை இல்லாத நிலையில், இன்று நாகை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதோடு, தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 35-45 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
News December 9, 2025
விற்பனையில் தள்ளாடுகிறதா ஜனநாயகன்?

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ வியாபாரம் சரிவர போகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘கோட்’ படம் ₹100 கோடிக்கு விற்பனையான நிலையில், இப்படத்தை ₹120 கோடிக்கு விற்க படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால், தமிழக விநியோகஸ்தர்கள், நீண்ட இழுபறிக்கு பின்னரே வாங்கினார்களாம். காரணம், விஜய் அரசியலில் இறங்கியுள்ளதால், பிற கட்சியினர் படம் பார்க்க வருவார்களா என்ற தயக்கம் உள்ளதாம்.
News December 9, 2025
புதுச்சேரியில் விஜய்யின் கூட்டணி வியூகம்!

அரசியல் தலைவராக புதுவைக்கு முதல் விசிட் அடித்த விஜய், பொதுக்கூட்டத்தில் திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால், அங்கு ஆட்சியில் உள்ள NR காங்கிரஸ், CM ரங்கசாமி பற்றி விமர்சனம் ஏதும் வைக்கவில்லை. மாறாக கூட்டத்திற்கு நல்ல பாதுகாப்பு அளித்த CM-க்கு நன்றி என்றார். நீண்ட காலமாக ரங்கசாமியுடன் நெருக்கமாக இருக்கும் விஜய், 2026-ல் அவருடன் கூட்டணி வைக்க வியூகம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


