News March 29, 2024

செந்தில் பாலாஜியைக் கண்டு பயந்த அண்ணாமலை?

image

செந்தில் பாலாஜிக்கு பயந்துதான் கரூரில் போட்டியிடாமல், கோவை பக்கம் அண்ணாமலை சென்றதாக கனிமொழி கூறியுள்ளார். கரூரில் பேசிய அவர், “அண்ணாமலை பொய் மட்டுமே பேசி வருகிறார். எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் செந்தில் பாலாஜி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் மறுக்கப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் அவர் வெளியே வந்து விடுவார்” என்றார்.

Similar News

News October 28, 2025

2 மாநிலங்களில் வாக்குரிமை: PK-வை சுற்றும் சர்ச்சை

image

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ‘ஜன் சுராஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, வரவிருக்கும் தேர்தலை சந்திக்க உள்ளார். இச்சூழலில், பிஹார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 2 மாநிலங்களில் அவர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்குள் அவர் விளக்கம் அளிக்க ECI உத்தரவிட்டுள்ளது.

News October 28, 2025

தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகள்

image

தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், சரியான உணவுகளைத் தேர்வு செய்வதும் அவசியம். எளிதாக கரையக்கூடிய நார்ச்சத்து, குறைந்த கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்டால் எளிதாக குறைக்கலாம். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த உணவை, கமெண்ட்ல சொல்லுங்க.

News October 28, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு புதிய அப்டேட்

image

5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் வரை வைத்திருப்பவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள். ஆனால், விண்ணப்பிக்கும்போது நில ஆவண விவரங்கள் கேட்கப்பட்டிருக்காது. இதனால், தங்களுக்கு ₹1,000 கிடைக்குமா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் அச்சப்பட தேவையில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு நவம்பரில் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளதாம். SHARE IT

error: Content is protected !!