News March 20, 2024
அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் மதுரை அருகே மருத்துவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன்கோரி திவாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, சாட்சிகளை கலைக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் அளித்தனர்.
Similar News
News November 5, 2025
நடிகை கனகாவுக்கு நடந்த துயரம்.. ராமராஜன் உருக்கம்

1990 களில் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன போட்டோ இணையத்தில் வெளியானது. அதன் பின்னர், நடிகர் ராமராஜன் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கனகா தனது தாயார் நடிகை தேவிகா மரணத்திற்கு பிறகு மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், பழைய நினைவுகளை மறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். மீண்டு வாருங்கள் கனகா என ரசிகர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.
News November 5, 2025
நல்ல ரோடு போட்டால், நிறைய விபத்து நடக்கும்: BJP MP

சாலைகள் நன்றாக போடப்பட்டிருந்தால், வாகனங்கள் வேகமாக செல்லும். அதன் காரணமாகவே விபத்துக்கள் அதிகரிக்கும் என BJP MP கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் நிகழ்ந்த பஸ் விபத்து குறித்து பேசிய அவர், நெடுஞ்சாலைகள் பெரிய வளைவுகளின்றி, ஒரே நேர்கோட்டில் இருக்கும் வகையில் அமைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். இவரின் கருத்தை குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
News November 5, 2025
போலி வாக்காளர்கள் CONG-க்கு வாக்களிக்க மாட்டார்களா? ECI

<<18205152>>ஹரியானா வாக்கு திருட்டு<<>> குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ECI அதிகாரிகள் மறுத்துள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கும் SIR நடவடிக்கையை ராகுல் ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை விளக்க வேண்டும். உண்மையில் போலி வாக்காளர்கள் இருந்தால், அவர்கள் பாஜகவிற்கு தான் வாக்களித்தார்கள் என்பதை ராகுல் எப்படி கூறுகிறார், ஏன் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்க மாட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


