News April 23, 2025

நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க நாளை மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Similar News

News April 24, 2025

பிளவுப்படுத்தும் அரசியலே காரணம்: ராபர்ட் வதேரா தாக்கு

image

பஹல்காம் தாக்குதலில் இந்துக்களை மட்டும் கொன்றது ஏன் என பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வினவியுள்ளார். நம் நாட்டில் தற்போது இந்துத்துவா பேசப்படுவதால், இந்து- முஸ்லிம் இடையே கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே இந்துக்கள் குறி வைக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். ஆனால், தாக்குதலை கண்டிக்காமல் இந்தியா மீது காங். பழிபோடுவதாக பாஜக விமர்சித்துள்ளது.

News April 24, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 24- சித்திரை- 11 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: தேய்பிறை

News April 24, 2025

காஷ்மீர் நரகமாகி வருகிறது: சல்மான்

image

ஜம்மு & காஷ்மீர் போன்ற ஒரு சொர்க்கம், தீவிரவாத தாக்குதல்களால் தற்போது நரகமாகி வருவதாக சல்மான் கான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். அதேபோல், மதத்தின் பேரால் இந்த பேரழிவை நடத்த யாருக்கும் உரிமை இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜும் கண்டித்துள்ளார்.

error: Content is protected !!