News April 27, 2025

ஆலப்புழா ஜிம்கானா இயக்குநர் கஞ்சா வழக்கில் கைது!

image

சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரும் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே, நடிகர் ஷைன் டாமும் போதைபொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார்.

Similar News

News February 10, 2026

மீண்டும் கைவிடப்பட்ட இஷான் கிஷன்

image

2025-26ஆம் ஆண்டுக்கான BCCI-யின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை. 2023-24 சீசனுக்கான ஒப்பந்தங்களில் இருந்து இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினர். தற்போது, ஸ்ரேயாஸ் ஒப்பந்தத்தில் சேர்த்த BCCI, இஷான் கிஷனை இணைக்கவில்லை. இதனையடுத்து, சிறப்பாக விளையாடும் அவரை மீண்டும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

News February 10, 2026

டிவி சேனலை தொடங்கும் சீமான்

image

தமிழகத்திலுள்ள திமுக (கலைஞர்), அதிமுக (நியூஸ் J), விசிக (வெளிச்சம்) என ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியாக செய்தி சேனல்கள் வைத்திருக்கின்றன. இதன்மூலம் தேர்தல் பரப்புரை மற்றும் தங்களின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும். அதுபோலதான் தற்போது, ‘எங்கள் தேசம்’ என்ற பெயரில் வலை தொலைக்காட்சியை பிப்.14-ம் தேதி சீமான் தொடங்கி வைக்கிறார். இது TV சேனலாக உருவெடுக்கிறது.

News February 10, 2026

EPS கோரிக்கையால் மோடி ராஜதந்திரம்

image

இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் மூலம் திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் EPS தொடர் கோரிக்கை வைத்தார். தற்போது மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால், திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருப்பார்கள்; மக்களின் வாழ்வாதாரமும் சிறப்பாக இருக்கும் என்றார்.

error: Content is protected !!