News April 27, 2025
ஆலப்புழா ஜிம்கானா இயக்குநர் கஞ்சா வழக்கில் கைது!

சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரும் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே, நடிகர் ஷைன் டாமும் போதைபொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார்.
Similar News
News December 7, 2025
CINEMA 360°: புது லுக்கில் கலக்கும் ஜி.வி.பிரகாஷ்

*புதுமுகங்கள் நடித்துள்ள ‘மாயபிம்பம்’ படத்தின் எனக்குள்ளே என்ற பாடலை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். *சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கும் ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. *ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். *ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘தி பாய்ஸ்’ வெப் சீரிஸின் 5-வது பாகத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
News December 7, 2025
34 சென்ட்டை தவிர மீதமுள்ள மலை முருகனுக்கே: H ராஜா

திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கிடையே, H ராஜா முதன்மை ரோலில் நடித்துள்ள ‘<<18493915>>கந்தன் மலை<<>>’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இதுதொடர்பாக பேசிய H ராஜா, 1310-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆட்சி செய்த சுல்தான்கள், பல இந்து கோயில்களை இடித்தனர் என்றார். இதுதொடர்பாக 1930-ல் வழங்கிய லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில், 34 சென்ட்டை தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம் என இருப்பதாகவும் அவர் கூறினார்.
News December 7, 2025
இந்த தலையணை மந்திரத்தை மறந்துடாதீங்க..

வசதியாகவும், அலுப்பு இல்லாமல் இருப்பதற்காகவும் தேடித்தேடி தலையணையை தேர்ந்தெடுக்கும் கவனம், அதனை சுத்தம் செய்வதிலும் இருக்க வேண்டும். தலையணை உறையை 3 – 4 நாள்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். தலையணையை 6 மாதங்களுக்கு ஒருமுறையும் வெயிலில் காய வைக்க வேண்டும். போர்வைகளை 2 – 3 மாதங்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். ஏனென்றால், தலையணை உறையில் டாய்லெட்டுக்கு இணையான பாக்டீரியாக்கள் இருக்குமாம். SHARE IT.


