News April 27, 2025
ஆலப்புழா ஜிம்கானா இயக்குநர் கஞ்சா வழக்கில் கைது!

சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரும் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே, நடிகர் ஷைன் டாமும் போதைபொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார்.
Similar News
News September 14, 2025
ரேஷன் பொருள்கள் கிடைக்கலையா? இத செய்யுங்க

நமக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாகவோ (அ) குறைந்த விலையிலோ கிடைப்பதால் அதனை எந்த குறையும் சொல்லாமல் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு, பொருள்கள் கிடைக்கவில்லை போன்ற பிரச்னைகள் இருந்தால் அதனை அரசிடம் தெரிவிக்கலாம். இதற்கு, <
News September 14, 2025
BREAKING: முடிவை மாற்றிய செங்கோட்டையன்!

தன்னை கட்சியிலிருந்து நீக்கினால் கூட அமைதியாக இருப்பேன் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம், TTV தினகரனை சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க EPS-க்கு விடுத்த 10 நாள்கள் கெடு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தன்னை நீக்கினாலும் அமைதியாக இருப்பேன் என கூறுவதன் மூலம் மனம் மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 14, 2025
மூலிகை: அரைக்கீரையும் அற்புத நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
✦அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதயம் வலிமை பெறும்.
✦அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குடல் புண்கள் விரைவில் குணமாகும்.
✦வாதநோய் உள்ளவர்கள் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும்.
✦அரைக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். SHARE IT.