News May 4, 2024
நாதக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற இருந்த நாதக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதி மறுத்த போதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் பலர் தடுப்பு காவலில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், நீதிமன்ற அனுமதி பெற்று மாற்று தேதியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
ராமர் பெயர் வைத்தால் என்ன? சிவி சண்முகம்

ராமனனோ, ராவணனோ யார் ஆண்டாலும் எங்களுக்கு சோறு கிடைத்தால் போதும் என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், காந்தி பெயரை வைத்தால் என்ன.. ராமர் பெயரை வைத்தால் என்ன.. திட்டம்தான் முக்கியம் என்று கூறினார். 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு எதிராக திமுக கூட்டணி போராட்டம் நடத்திவரும் நிலையில், சண்முகத்தின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
News February 13, 2026
2026 Election: தேர்தல் ஆணையம் அறிவித்தது

தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, EVM & VVPAT இயந்திரம் பயன்படுத்துவது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ECI அறிவித்துள்ளது. இதற்காக கலெக்டர், சப்-கலெக்டர் & வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்களில் செயல்முறை விளக்க மையங்கள் மற்றும் நடமாடும் செயல் விளக்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
News February 13, 2026
இரவில் இதை செய்தால் பிரச்னை தான்!

இரவில் லைட்டுகளை போட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இப்படி தூங்குவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக உடல்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஏனென்றால் தூங்கும்போது செயல்படும் மெலடோனின் ஹார்மோன் வெளிச்சத்தில் செயல்படாது. இரவில் செல்போன் அல்லது டிவி பார்ப்பதும் பிரச்சனை தான். இன்றே மாறலாமே?


