News April 22, 2025
ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கைது

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் PM மோடியின் புகைப்படத்தை எரித்ததால், போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
Similar News
News July 11, 2025
பெங்களூருவில் தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ்

பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் 7000 பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டசத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் ரைஸ் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ₹2.88 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இத்திட்டம் மூலம் தினமும் 5000 நாய்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
₹36,900 சம்பளத்தில் அரசு பள்ளிகளில் 1,996 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 1,996 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed, B.Sc.Ed படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும் (இதில் தமிழ் கட்டாயம்). ₹36,900- ₹1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும். முழு தகவலுக்கு <
News July 11, 2025
கருணாநிதி வாழ்ந்த தெருவில் உறுப்பினர் சேர்க்கை: CM

திருவாரூரில் கருணாநிதி வாழ்ந்த சன்னதி தெருவில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலம் 54,310 புதிய உறுப்பினர்களையும், 30,975 குடும்பங்களையும் திமுகவில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதி இணைத்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். திருச்சுழியை முந்திச்செல்ல களத்தில் பணியாற்றுபவர்களுக்கு வாழ்த்துகள் எனவும் பதிவிட்டுள்ளார்.