News April 22, 2025
ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கைது

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் PM மோடியின் புகைப்படத்தை எரித்ததால், போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
Similar News
News April 22, 2025
காவிரி தண்ணீர்.. கர்நாடக அரசுக்கு முக்கிய உத்தரவு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடத்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மையின் 39-வது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
News April 22, 2025
தீவிரவாத தாக்குதல்… அமித் ஷாவிடம் ஆலோசித்த PM

சவுதி அரேபியா சென்றுள்ள PM மோடி <<16180559>>ஜம்மு காஷ்மீர் தாக்குதல்<<>> குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மக்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொல்லிய மோடி, அமித் ஷாவை நேரில் சென்று பார்வையிடவும் அறிவுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர்.
News April 22, 2025
கவலைக்கிடமான நிலையில் உதவி கேட்கும் தமிழ் நடிகர்

புற்று நோயால் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வரும் நடிகர் சூப்பர் குட் <<16171338>>சுப்பிரமணி <<>>மீண்டும் உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று அவர் கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை யாரும் உதவி செய்யவில்லை. இந்நிலையில், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி & வீட்டு வாடகைக்கு பணம் இல்லை. வசதி படைத்த நடிகர்கள் & அரசு தனக்கு உதவ வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.