News April 16, 2025
தற்கொலை செய்த நடிகை மோனல்; 23 ஆண்டாக மர்மம்

பத்ரி, சமுத்திரம் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சிம்ரனின் சகோதரி மோனல். 2002 ஏப்ரல் 14-ம் தேதி திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது மோனல் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில், உண்மையான ஆண்மகனை தாம் பார்க்கவில்லை எனக் கூறியிருந்தார். யாரோ காதலித்து அவரை ஏமாற்றிவிட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் 23 ஆண்டுகளாகியும் மோனலை ஏமாற்றியது யாரென தெரியவில்லை. மர்மம் நீடிக்கிறது.
Similar News
News December 8, 2025
BREAKING: கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய பரிந்துரை

திமுக முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய ED பரிந்துரை செய்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் ₹1,020 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக நேரு மீது FIR பதிவு செய்து, விசாரனை நடத்த தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு 252 பக்க ஆவணங்களை ED அனுப்பியுள்ளது.
News December 8, 2025
ஹைதராபாத்தில் டொனால்ட் டிரம்ப் சாலை!

ஹைதராபாத்தில், USA துணை தூதரகம் அமைந்துள்ள உள்ள சாலைக்கு ‘டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ’ என பெயரிட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. மேலும், புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமைவெளி சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் பெயர் சூட்டப்பட உள்ளது. ஏற்கெனவே சாலைகளுக்கு <<18292123>>கார்பரேட் நிறுவனங்களின்<<>> பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக CM ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தன் ஒருபகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
இந்து, இந்தியா என பிரித்து பேசலாமா? சீமான்

‘இந்திய மக்களின் ஒற்றுமை’ என சொல்லாமல் ‘இந்து சமுதாயத்தின் ஒற்றுமை’ என அமித்ஷா சொல்வது கவலையளிப்பதாக சீமான் பேசியுள்ளார். நாட்டை வழிநடத்தும் அரசு, இந்தியர்களின் ஒருமைப்பாட்டை பற்றி பேசவேண்டும் என்ற அவர், இந்துவுக்கு ஒரு கனவு, இந்தியாவுக்கு ஒரு கனவு என்று பிரித்து பேசமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக நடத்தும் அமைதி பேரணி கூட சந்தேகங்களை கிளப்புவதாக கூறியுள்ளார்.


