News August 4, 2024
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: கேரள அரசு

வயநாடு நிலச்சரிவு பேரிடர் தொடர்பாக தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக தவறான தகவல் பரவி வருவதாக கூறிய அவர், குழந்தைகளை வளர்க்க விண்ணப்பம் பெற்று குழந்தைகளை வழங்குவதாக பரவும் செய்தி உண்மையல்ல என விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
தி.மலை: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

தி.மலை மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 17, 2026
மாயமான விமானம்… 11 பேர் பலியா?

இந்தோனேசியாவின் ATR 42-500 ரக விமானம் இன்று மாயமாகியுள்ளது. மதியம் 1:17 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது எனவும், அதன் கடைசி சிக்னல் Makassar என்ற பகுதிக்கு வடகிழக்கே சுமார் 20 கிமீ தூரத்தில் பெறப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானம் விபத்துக்குள்ளானதை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் அதில் பயணித்த 14 பேரின் நிலைமை தற்போது கேள்வி குறியாகியுள்ளது.
News January 17, 2026
கூட்டணி முடிவு வெளியானது.. அதிரடி திருப்பம்

தமிழகத்தில் PM மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட பதாகையில் TTV போட்டோ இடம்பெற்றது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில், கூட்டணி பற்றி உரிய நேரத்தில் ‘உரியவர்கள்’ அறிவிப்பார் என்று TTV தினகரன் கூறியுள்ளார். இதனால் அவர் மீண்டும் NDA கூட்டணியிலேயே இணைவார் என்றும், அதனை PM மோடி அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?


