News March 16, 2025

மனிதரை கல்லாக்கும் கோயில்?

image

ராஜஸ்தானின் குல்தாரா கிராமத்தில் உள்ள கிரடு கோயிலுக்கு இரவில் யாரும் வருவதோ, தங்குவதோ இல்லை. இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, பழங்காலத்தில் முனிவர் ஒருவர் சீடர்களுடன் வந்ததாகவும், சீடர்கள் உடல்நிலை பாதித்தபோது உதவாத கிராமத்தினரை இரவில் கல்லாகிவிடுவர் என சாபமிட்டதாகவும், ஒரு பெண் கல்லானதாகவும் கூறப்படுகிறது. இந்த அச்சமே இரவில் யாரும் அங்கு வராததற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

Similar News

News March 16, 2025

TMB வங்கியில் வேலைவாய்ப்பு.. அவகாசம் நீட்டிப்பு

image

TMB வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அந்த வங்கியின் கிளைகளில் 124 சீனியர் கஸ்டமர் சர்வீஸ் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 16, 2025

போஸ்ட் ஆபீசிஸ் 21,413 வேலை.. விண்ணப்ப நிலை அறிய வசதி

image

போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள 21,413 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பப்பதிவு மார்ச் 3 வரை நடைபெற்றது. இந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா, இல்லையா என்பதை அறிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <>https://indiapostgdsonline.gov.in/<<>> சென்று Apply Online பகுதிக்கு சென்று, Application Status என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திறக்கும் பக்கத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணை உள்ளிட்டு விண்ணப்ப நிலவரம் அறியலாம்.

News March 16, 2025

பெ.ம.க. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்

image

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் (பெ.ம.க.) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை கட்சியிலிருந்து அக்கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் நீக்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரஸ்னா எஸ்.பி. மாரியப்பன், பொருளாளர் மில்லை எஸ். தேவராஜ் ஆகியோர் கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாகவும், ஆதலால் 2 பேரும் நீக்கப்படுவதாகவும் என்.ஆர். தனபாலன் கூறியுள்ளார்.

error: Content is protected !!