News March 15, 2025
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம்

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 4 ஆண்டுகளில் 10,187 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2025–26ல் மேலும் 2,338 ஊராட்சிகளில் விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் 9.36 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 15, 2025
கொரோனாவால் ஆண்களுக்கு நேர்ந்த கொடுமை

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 20121-ல் கொரோனா பாதித்த ஆண்களில் 5-ல் ஒருவருக்கு விறைப்புத்தன்மை பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு பாதிப்பு தொடர்கிறதாம். ஆணுறுப்பு ரத்தநாளங்களை வைரஸ்கள் பாதித்ததால், விறைப்பு நிலையை எட்டுவது இவர்களுக்கு கடினமாக உள்ளதாம். ஆண்களுக்கு வந்த சோதனை!
News March 15, 2025
நாய் கீறி விட்டதா? இதை செய்ய மறக்காதீங்க

வேலூரில் ரமேஷ் (49) என்பவரை, நாய் கீறிவிட்டுள்ளது. அவரும் அதை பொருட்படுத்தாமல், தடுப்பூசி போடாமல் இருந்துள்ளார். ஆனால், 40 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் வரவே, ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை சுட்டிக்காட்டும் டாக்டர்கள், நாய் போன்ற விலங்குகள் கடித்தால் மட்டுமல்ல, கீறினாலும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, தடுப்பூசி போட மறக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளனர்.
News March 15, 2025
இருமொழிக் கொள்கையால் இக்கட்டான நிலை இல்லை: CM

சென்னை பார் அசோசியேஷனின் 160வது ஆண்டு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார். மேலும், இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.