News August 21, 2024
கோலிக்கு எதிராக பந்து வீச விரும்பும் வீராங்கனை

நியூசிலாந்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை சாரா ஜெட்லி, விராட் கோலிக்கு எதிராக பந்து வீச விரும்புவதாக தெரிவித்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் பந்து வீசுவது கடினம் எனவும், விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கோலிக்கு எதிராக பந்து வீசுவது மட்டுமில்லாமல், அவருடன் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 1, 2026
ஏற்காடு: கார் மோதி மூதாட்டி பலி – 3 பேர் கைது

ஏற்காடு நாகலூர் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த செல்லம்மாள் (62) என்ற மூதாட்டி மீது, அரூரில் இருந்து வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஏற்காடு போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 1, 2026
ஏற்காடு: கார் மோதி மூதாட்டி பலி – 3 பேர் கைது

ஏற்காடு நாகலூர் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த செல்லம்மாள் (62) என்ற மூதாட்டி மீது, அரூரில் இருந்து வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஏற்காடு போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 1, 2026
மயிலாடுதுறை: கேலோ இந்தியா – 8 மாணவர்கள் தேர்வு

மத்திய அரசின் கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டு போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் மல்லர்கம்பம் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 16 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய போட்டியில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறையிலிருந்து மாணவர்கள் ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்தி வழி அனுப்பினர்.


