News November 25, 2024

சரத் பவாருக்கு வந்த புதிய சிக்கல்!

image

மகாராஷ்டிரா தேர்தலில் தோல்வியடைந்ததால் ராஜ்ய சபாவுக்கு சரத் பவார் மீண்டும் தேர்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிட்ட NCP(SP) 10 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 2026 ஏப்ரலில் சரத் பவாரின் ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அவரது கட்சிக்கு போதிய எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் மீண்டும் ராஜ்ய சபா எம்.பியாக தேர்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது.

Similar News

News October 30, 2025

தேவர் நினைவிடத்தில் மோதல்.. பரபரப்பு

image

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மோதல் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அங்கிருந்த பூசாரிகளை வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தேவர் நினைவிட பூசாரிகளை ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

News October 30, 2025

சீனா மீதான வரியை குறைத்த டிரம்ப்!

image

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தென்கொரியாவில் சந்தித்து பேசினார் அதிபர் டிரம்ப். அப்போது வரி விதிப்பு, வர்த்தகம், இருநாட்டு உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் விளைவாக சீனா மீதான இறக்குமதி வரியில் 10%-ஐ குறைத்துள்ளார் டிரம்ப். இந்த சந்திப்பு மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ள அவர், அரிய மண் கனிமங்களை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News October 30, 2025

BREAKING: பசும்பொன்னில் அரசியல் திருப்பம்

image

தேவர் குருபூஜை நாளான இன்று அரசியல் ரீதியாக அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. பசும்பொன்னில் EPS-க்கு எதிராக டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றாக இணைந்தனர். இச்சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே சீமானை தோளில் கைப்போட்டு வைகோ அழைத்து வந்தார். மதிமுகவினரும், நாதகவினரும் மோதி வந்தனர். தற்போது இருவரும் இணக்கமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

error: Content is protected !!