News November 25, 2024
சரத் பவாருக்கு வந்த புதிய சிக்கல்!

மகாராஷ்டிரா தேர்தலில் தோல்வியடைந்ததால் ராஜ்ய சபாவுக்கு சரத் பவார் மீண்டும் தேர்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிட்ட NCP(SP) 10 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 2026 ஏப்ரலில் சரத் பவாரின் ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அவரது கட்சிக்கு போதிய எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் மீண்டும் ராஜ்ய சபா எம்.பியாக தேர்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது.
Similar News
News November 26, 2025
பேங்க் அக்கவுண்ட் இல்லாமலும் UPI-யில் பணம் அனுப்பலாம்!

வங்கி கணக்கு இல்லாதவர்களும் பணம் அனுப்பும் ‘UPI Circle: Full Delegation’ என்ற வசதியை BHIM கொண்டு வந்துள்ளது *UPI ஆப்பில், வங்கி கணக்கு உள்ள Primary Users, ‘UPI Circle’ ஆப்ஷனுக்கு செல்லவும் *அதில், வங்கி கணக்கு இல்லாத 5 பேரை Secondary User-களாக சேர்க்கவும் *Secondary User-களுக்கு ஒரு VPA ID உருவாகும் *அதன் மூலம் அவர்கள் பரிவர்த்தனை செய்யலாம் *அதிகபட்சமாக ₹15,000 வரை பரிவர்த்தனை செய்யலாம்.
News November 26, 2025
செங்கோட்டையன் முன் இருக்கும் 3 வாய்ப்புகள்!

MLA பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையனுக்கு தற்போது 3 வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.1. விஜய் கட்சியில் இணைவது. 2. திமுகவின் அழைப்பை ஏற்று அங்கு செல்வது(நீண்ட காலமாக அதிமுகவில் பயணித்துவிட்டு திமுகவுக்கு சென்றால் எதிர்மறையான எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தலாம்) 3. தனியாக கட்சி தொடங்குவது. இதில், முதல் வாய்ப்பையே அவர் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News November 26, 2025
BREAKING: தமிழ்நாட்டிற்கு ‘ரெட் அலர்ட்’

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று(நவ.26) கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. அதேபோல், நாளை(நவ.27) தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


