News November 22, 2024
14 வயது சிறுவனுடன் உறவு: ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை

அமெரிக்காவில் 8-ம் வகுப்பு படித்த 14 வயது மாணவனுடன் உறவுகொண்ட ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின், குற்றத்தை ஒப்புக்கொண்டு ஆசிரியை மன்னிப்பு கேட்டதால், அடுத்த 12 மாதங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும், அதன்பின் 25 ஆண்டுகளுக்கு ‘பாலியல் குற்றவாளி’ பட்டியலில் வைக்கப்படுவார் எனவும் தீர்ப்பளித்தது.
Similar News
News August 19, 2025
பஞ்சாயத்தை சீக்கிரம் முடிங்க.. அதிமுக அனுப்பிய தூது!

2026 தேர்தலுக்காக வலுவான கூட்டணியை அமைக்க ADMK தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ADMK-வுடன் BJP என்ற பெரிய கட்சி மட்டுமே இருப்பதால், வலுவான கூட்டணி இல்லை என்ற விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதனால், விரைவாக PMK, DMDK-வை சேர்க்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். குறிப்பாக, PMK-வில் தந்தை – மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இணைந்து செயல்பட அன்புமணிக்கு தூது அனுப்பப்பட்டுள்ளது.
News August 19, 2025
முதல் ரூபாய் நோட்டை பாத்திருக்கீங்களா?

இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1935-ல் பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது. அதனை தொடர்ந்து, தனது முதல் ரூபாய் நோட்டாக ரிசர்வ் வங்கி 1938-ல் ₹5 மதிப்பிலான நோட்டை அச்சடித்து வெளியிடப்பட்டது. இந்த நோட்டில் அப்போதைய இங்கிலாந்து அரசர் கிங் ஜார்ஜ் VI இடம்பெற்றிருந்தார். அதே வருடத்தில் ₹10, ₹100, ₹1,000, ₹10,000 நோட்டுகளும் அச்சடித்து வெளியிடப்பட்டன. நீங்க பார்த்த பழைய ரூபாய் நோட்டு எது?
News August 19, 2025
இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் CEO பொறுப்பு?

ரெட் ஜெயண்ட் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் CEO பொறுப்பு உதயநிதி மகன் இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தையை போல் சினிமா தயாரிப்பில் கால்பதிக்கும் அவர், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில், இன்பநிதிக்கு கலைஞர் டிவியில் நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.