News November 21, 2024
தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்?.. உண்மை என்ன

தமிழ்நாட்டில் புதிதாக கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர், செய்யாறு ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு குடியரசு தினத்தன்று வெளியாகும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல். இது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மக்கள் இதை நம்ப வேண்டாம் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம்: PM மோடி

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துகளை மக்களுக்கு PM மோடி தெரிவித்துள்ளார். இந்நாள் தரும் ஊக்கத்தில் கடுமையாக உழைத்து நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம் என தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் 12-வது முறையாக PM மோடி செங்கோட்டையில் கொடியேற்ற உள்ளார்.
News August 15, 2025
₹3,000 டோல்கேட் FAStag பாஸ் இன்று அமலுக்கு வருகிறது

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் எவ்வித கட்டணமுமின்றி பயணிக்கலாம். Rajmarg Yatra செயலியில் PASS வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண், வாகன பதிவு எண், பாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம். SHARE IT.
News August 15, 2025
டிரம்ப் – புடின் இன்று சந்திப்பு.. வர்த்தக போர் முடிவுக்கு வருமா?

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப், புடின் இருவரும் அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விற்பனை, பொருளாதார ஸ்திரத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயன்று வருகிறார். இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் இந்தியா மீதான வரியும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.