News November 18, 2024
தமிழர்களை தீவிரவாதிகள் எனக் கூறவில்லை: ஷோபா

திருச்சிக்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே இன்று வருகை தந்தார். அப்போது, தான் தமிழர்களை தீவிரவாதிகள் எனக் கூறவில்லை என்றார். பாகிஸ்தானியர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற்று குண்டு வைத்ததாகவே தான் கூறியதாகவும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் மன்னிப்பு கேட்டதாகவும் ஷோபா விளக்கம் அளித்தார். பெங்களூர் குண்டுவெடிப்புக்கு தமிழத்தில் இருந்து வந்தவர்களே காரணம் என ஷோபா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 28, 2025
Beauty: முடி நிக்காம வளரணுமா? இதை செய்து பாருங்க..

உங்களுக்கு முடி உதிர்வு, இளநரை, வறண்ட முடி, பொடுகு தொல்லை என அனைத்தும் இருக்கிறதா? இவை அனைத்தையும் ஒரேயொரு பொருளை வைத்து சரி செய்யலாம். அதுதான் அன்னாசி பூ. ▶முதலில், அன்னாசி பூவை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் ▶அதை தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடுங்கள் ▶வடிகட்டிய பிறகு அந்த எண்ணையை வாரத்திற்கு இருமுறை தலைக்கு பயன்படுத்துங்கள். SHARE.
News August 28, 2025
சீன வீராங்கனையை சிதறவிட்ட சிந்து

பாரிஸில் நடக்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 3வது சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் Wang Zhi Yi-ஐ எதிர்கொண்ட அவர் 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இத்துடன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிந்து ஒரு முறை கூட சீனா வீராங்கனைகளிடம் தோற்றதில்லை என்ற சாதனை நீடிக்கிறது.
News August 28, 2025
நல்லகண்ணு நலம்பெற விரும்புகிறேன்: CM ஸ்டாலின்

சென்னை ராஜீவ்காந்தி ஹாஸ்பிடலில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் கேட்டறிந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.